Tuticorin

News August 21, 2024

புதிய ஆட்சியர் இன்று பதவியேற்பு

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த லட்சுமிபதி சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய ஆட்சியராக அரசின் நூலகத்துறை இயக்குனராக இருந்த இளம் பகவத் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆட்சியர் இளம்பகவத் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்க உள்ளார்.

News August 21, 2024

சத்துணவு மையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

image

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் தங்கம் நடுநிலைப் பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் நேற்று சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் பற்றி சத்துணவு அமைப்பாளர்களிடம் கேட்டறிந்ததுடன் உணவினை சாப்பிட்டும் ருசி பார்த்தார்

News August 20, 2024

இரவு நேர காவல்துறையினரின் தொலைபேசி எண்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 20, 2024

குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் ஜாதி ரீதியாக ஆடல் பாடல் ஒலிக்க விடுவது, கோசங்கள் எழுப்புவது போன்ற பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எவரும் செயல்படக்கூடாது என எஸ்பி தெரிவித்துள்ளார். மேலும் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News August 20, 2024

மத்திய அமைச்சருக்கு கீதாஜீவன் பதிலடி

image

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று உதயநிதி துணை முதல்வர் ஆவது குறித்து பேசிய மத்தியஇணையமைச்சர் எல்.முருகன், அவர் தமிழகத்தின் துணை முதல்வராக வருவதால் ஒன்றும் பெரிய மாற்றம் இருக்காது என்றார். இந்நிலையில் அவரின் கருத்திற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் கீதாஜீவன், வாய்க்கு வந்ததை எல்லாம் அவர் பேசக் கூடாது. பிற கட்சியினர் திமுகவின் மீது சேற்றை வாரி இறைப்பது நல்லதல்ல என தெரிவித்தார்.

News August 20, 2024

தூத்துக்குடி கலெக்டர் பணியிட மாற்றம் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து

image

ஏரலில் இம்மாதம் 21, 22ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் “உங்களைத் தேடி,உங்கள் ஊரில்” திட்ட முகாம் நடைபெறுவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் 21, 22ஆகிய தேதிகளில் பெற்றுக் கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்ற அறிவிப்பால் இந்த நிகழ்ச்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

News August 20, 2024

மேனேஜ்மென்ட் படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதி திராவிடர்கள் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் (தாட்கோ) 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு படித்து முடித்த மாணவ மாணவிகள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் 3 ஆண்டுகள் பட்டம் மற்றும் பட்டய படிப்புகள் படிக்க விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதற்கான முழு செலவையும் தாட்கோ ஏற்றுக் கொள்ளும். இதற்கு www.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

News August 20, 2024

மாணவி பாலியல் வன்கொடுமை கனிமொழி எம்பி கண்டனம்

image

கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவி சிவராமன் என்ற ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பையும், இனியும் மனிதத்தன்மையற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் உறுதி ஏற்போம் என்று தூத்துக்குடி எம்பி கனிமொழி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

News August 19, 2024

மேனேஜ்மென்ட் படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதி திராவிடர்கள் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் (தாட்கோ) 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு படித்து முடித்த மாணவ மாணவிகள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் 3 ஆண்டுகள் பட்டம் மற்றும் பட்டய படிப்புகள் படிக்க விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதற்கான முழு செலவையும் தாட்கோ ஏற்றுக் கொள்ளும். இதற்கு www.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

News August 19, 2024

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை தேதி நீட்டிப்பு

image

தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அரசு ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் தேதி முடிவடைந்தது. இந்த நிலையில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான தேதி ஆக.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!