Tuticorin

News August 22, 2024

தூத்துக்குடி அஞ்சல் துறை சார்பில் முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தின்கீழ் உள்ள தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில், வெளிநாட்டு ஏற்றுமதியாளர்களுக்கான அஞ்சலக ஏற்றுமதி மையம் (DAK GHAR NIRYAT KENDRA) 2022ம் ஆண்டு துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவதுடன் ஏற்றுமதியாளர்களிடம் சிறந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. எனவே இந்த சேவையை பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என கோட்ட கண்காணிப்பாளர் (பொ) சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

News August 22, 2024

பயிர் மேலாண்மை திட்டத்திற்கு மானியம்

image

கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் கிரேபா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பயிர்களுக்கு நுண்ணூட்ட சத்துக்கள் கிடைப்பதற்காக பயிர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகளுக்கு உயிர் கட்டுப்பாட்டு காரணிகள், திரவ உயிர் உரங்கள், தொழு உரம் நுண்ணூட்டக் கலவை ஆகியவை 50 சதவீதம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

News August 22, 2024

பயிர் மேலாண்மை திட்டத்திற்கு மானியம்

image

கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் கிரேபா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பயிர்களுக்கு நுண்ணூட்ட சத்துக்கள் கிடைப்பதற்காக பயிர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகளுக்கு உயிர் கட்டுப்பாட்டு காரணிகள், திரவ உயிர் உரங்கள், தொழு உரம் நுண்ணூட்டக் கலவை ஆகியவை 50 சதவீதம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

News August 22, 2024

கார் உரிமையாளருக்கு ரூ.12 லட்சம் வழங்க உத்தரவு

image

கேரளாவை நேர்ந்த பென்னிமேத்யு என்பவர் சாத்தான்குளம் பகுதியில் காரில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. காரை நெல்லையில் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் ஒப்படைத்து இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்த போது நிறுவனம் பணத்தை தர மறுத்துள்ளது. இதனால் மேத்யு தூத்துக்குடி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நேற்று காரின் விலை ரூ.11 லட்சம், மனஉளைச்சலுக்கு ரூ.1 லட்சம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

News August 22, 2024

தூத்துக்குடி எஸ்பி முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வாரம் தோறும் புதன்கிழமை தோறும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் புதிய மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் மேற்கண்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மீது திருப்தி இல்லை என்றால் நேரடியாக என்னை சந்திக்கலாம் என அவர் மக்களுக்கு இன்று அறிவுறுத்தியுள்ளார்.

News August 21, 2024

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 21.08.2024 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம். தூத்துக்குடி, மணியாச்சி, திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம், விளாத்திகுளம், கோவில்பட்டி பகுதிகளில் இரவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்

News August 21, 2024

தூத்துக்குடி எஸ்பி முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வாரம் தோறும் புதன்கிழமை தோறும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் புதிய மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் மேற்கண்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மீது திருப்தி இல்லை என்றால் நேரடியாக என்னை சந்திக்கலாம் என அவர் மக்களுக்கு இன்று அறிவுறுத்தியுள்ளார்.

News August 21, 2024

நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (ஆகஸ்டு 22) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் முத்து அரங்கில் வைத்து நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News August 21, 2024

திமுக சார்பில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

image

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டி வருகின்ற 24-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. லட்சுமி மகாலில் நடைபெறும் இந்த பேச்சுப்போட்டியில் மாணவ மாணவிகள் தவறாது கலந்து கொள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் கீதா ஜீவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 21, 2024

முதன்மை கல்வி அதிகாரி பணியிட மாற்றம்

image

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த திருமதி ரெஜினா தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருவண்ணாமலை மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த கணேசமூர்த்தி தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை நேற்று தெரிவித்துள்ளது.

error: Content is protected !!