Tuticorin

News April 30, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஏப்.29) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 0461-2340393 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 9514144100 எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 29, 2025

தூத்துக்குடியில் மகளிர் கிரிக்கெட் அணித் தேர்வு

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான 12 வயதிற்கு மேற்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் அணித் தேர்வு (மே1) வியாழன் அன்று தூத்துக்குடி JMJ கிரிக்கெட் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 8015621154, 8754004377 மற்றும் 9944833333 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News April 29, 2025

திருமண தடை நீங்க வேண்டுமா? இங்கே வாங்க

image

குலசேகரப்பட்டினத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயிலில், தலவிருட்சம் மாமரத்தின் கீழே மாவடி அம்மன் சிலை உள்ளது. அம்மனை குழந்தை பாக்கியம் இல்லாதோர் மாங்கனிகளை படைத்து வழிபாடு செய்வார்கள். அதேபோல் திருமண தடை உள்ளவர்கள் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு செய்து வளையல் படைத்து வழிபட்டால் திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.

News April 29, 2025

மயோனைஸ் பயன்படுத்த தடை – ஆட்சியர் எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்; “பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் கிருமி நீக்கப்படாத மயோனைஸ் சைஸ்சினை வணிக விற்பனையாளர்கள் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. உடல் உபாதைகளை ஏற்படுத்தும் இந்த மயோனைஸை வணிக நிறுவனங்களில் விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

News April 29, 2025

தூத்துக்குடி நீதிபதிகள் பணியிட மாற்றம்

image

தூத்துக்குடி உட்பட தமிழ்நாடு முழுவதும் 27 மாவட்ட நீதிபதிகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மகளிர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த மாதவ ராமானுஜம் மதுரை மாவட்டம் மூன்றாவது கூடுதல் நீதிபதியாகவும், தூத்துக்குடி குடும்ப நல நீதிமன்ற நீதிபதி வி சுரேஷ் ஈரோடு மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிபதியாக பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

News April 29, 2025

தூத்துக்குடி:உங்கள் போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

image

▶️துணை காவல் கண்காணிப்பாளர், திருச்செந்தூர் – 04639-245100

▶️துணை காவல் கண்காணிப்பாளர், ஸ்ரீவைகுண்டம் – 04630-255236

▶️துணை காவல் கண்காணிப்பாளர், மணியாச்சி – 0461-2273252

▶️துணை காவல் கண்காணிப்பாளர், கோவில்பட்டி – 04632-220020

▶️துணை காவல் கண்காணிப்பாளர், விளாத்திகுளம் – 04638-233498

▶️துணை காவல் கண்காணிப்பாளர், சாத்தான்குளம் -04639-266499

News April 29, 2025

தூத்துக்குடி:மீன் வலையில் சிக்கி தொழிலாளி பலி

image

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை இந்திரபிரஸ்தம் தெருவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி வெற்றிவேல்முருகன்(45). இவர் கழுகுமலை பகுதியில் குளங்களில் மீன் பிடித்து விற்பனை செய்து வருகிறார்.கடந்த 27-ம் தேதி மாலை குறவன்குளத்தில் மீன் பிடிக்கச் சென்றார். மதுபோதையில் குளத்தில் இறங்கிய அவர், மீனுக்கு விரிக்கப்பட்ட வலைக்குள் சிக்கி மூழ்கி உயிரிழந்தார். கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

News April 29, 2025

தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.

News April 28, 2025

தூத்துக்குடி மக்களே.. இத சாப்பிட்டு பாருங்க!

image

பனை மரங்கள் நிறைந்த திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தயாரிக்கப்படும் கருப்பட்டி தான் சுக்கு கருப்பட்டி. பதநீரைக் காய்ச்சி அதில் சுக்கு மிளகு இஞ்சி சேர்த்து சிறிய அச்சுகள் கொண்டு இந்த சுக்கு கருப்பட்டியை தயார் செய்கின்றனர். மிட்டாய் போல சாப்பிடும் இந்த சுக்கு கருப்பட்டி உடல் ஆரோக்கியத்திற்கும் அஜீரணத்திற்கும் சிறந்தது என்று நம்பப்படுகிறது. Share It.

News April 28, 2025

தூத்துக்குடி: ரயில்வேயில் உடனடி வேலை

image

தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

error: Content is protected !!