India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்வோர் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிந்து பாதுகாப்பாக பயணம் செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. “ஹெல்மெட் (தலைக்கவசம்) அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டுவீர், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வீர்” என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் கட்டமைப்பை முன்னேற்றும் விதமாகவும், மேம்படுத்துவதன் வழியாகவும், இந்தியாவின் முதல் மாவட்டமாக மாற்றும் விதமாக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் ‘புத்தொழில் களம்’ என்ற நிகழ்ச்சி (ஏப் 6) இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு கடற்கரை சாலை பகுதியில் இன்று பொதுமக்கள் ஆரோக்கியத்தை பேணுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 8 கிலோ மீட்டர் தூரம் ஹெல்த் வாக் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் மற்றும் சுகாதார பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மேல அலங்காரத்தை சேர்ந்த வின்சென்ட் 1999 தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு இறந்தார். இது சம்பந்தமாக நடைபெற்று வந்த வழக்கில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று 9 காவல்துறையினருக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதனையடுத்து நேற்று உயிரிழந்த வின்சென்ட் இல்லத்திற்கு சென்ற பொதுமக்கள் சிபிஎம் கட்சியினர் அவரது படத்திற்கு மாலை அணிவித்தனர்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவு மற்றும் பொறியாளர் தொழில்நுட்ப ஆதரவு பிரிவில் 15 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 18 முதல் 25 வயதிற்குட்பட்ட இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் மாதம் ஊதியமாக ரூ.15000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2019 -ம் ஆண்டில் 6 வயது சிறுவனை பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்த அருண்ராஜ் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றவாளிக்கு 2 ஆயுள் தண்டனைகள் மற்றும் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.30,000 அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ் நேற்று தீர்ப்பளித்துள்ளார்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு வின்சென்ட் என்ற விசாரணை கைதி மரணம் அடைந்தார். இது சம்பந்தமான வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் தற்போது டிஎஸ்பியாக இருக்கும் ராமகிருஷ்ணன் உட்பட 9 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.
ஆழ்வார் திருநகரி அருகே உள்ள செம்பூரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (22). இவர் 2014 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவர் மீது தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் ஆழ்வார் திருநகரி போலீசார் போக்சோ வழக்கு தொடர்ந்ததனர். இதில் இவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்தும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 25 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் முதல் வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை.<
கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து இன்று குற்ற ஆய்வு கூட்டம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குற்ற வழக்குகள் விசாரணை பற்றியும், கஞ்சா, குட்கா போன்ற போதை பொருளகடத்தலை தடுப்பது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் மாவட்டத்தில் ரவுடிகளை கண்காணிக்கவும் காவல்துறையினருக்கு எஸ்பி உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.