India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி, சாயர்புரம் அருகே பண்டாரவிளை பாண்டுவர் (வைத்தியர்) விளை மருவி பண்டார விளை ஆயிற்று. இங்கு கை, கால் முறிவுக்கு கட்டு போடும் வைத்தியர்கள் அதிகம் உள்ளனர். 800 வருடங்களாக இந்த வைத்தியம் நடைபெற்று வருகிறது. மன்னர்கள் காலத்தில் காயமடைந்த வீரர்கள் இந்த ஊரின் அருகே தங்கி வைத்தியம் செய்து கொள்வர். தூத்துக்குடியில் ஒருவரை கோபமாக கை காலை முறித்திடுவேன் என்பதற்கு பண்டாரவிளைக்கு அனுப்புவேன் என்பர்
தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அவரது நிலத்தில் செல்போன் டவர் அமைக்க இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வந்த குறுந்தகவல் வந்துள்ளது. இதில் அவர் பல்வேறு கட்டணங்கள் கட்ட வேண்டும் எனக் கூறி ரூ.40 லட்சம் வரை கொடுத்து ஏமாந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்த போலீசார் முரளி கிருஷ்ணன் என்பவரை இன்று கைது செய்தனர். (SMS மோசடியில் விழிப்புணர்வுடன் செயல்பட பிறருக்கும் ஷேர் செய்யுவும்)
தமிழ்நாடு முழுவதும் நாளை(மார்ச் 28) SSLC தேர்வு தொடங்குகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தேர்வினை 21,994 மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.
முன் ஒரு காலத்தில் மன்னர் ஒருவர் தென்பகுதியில் வேட்டைக்கு வந்த பொழுது அவரது வேட்டை நாயை முயல் ஒன்று துரத்தியுள்ளது. இதனை கண்ட மன்னர் ஆச்சரியமடைந்து இதுதான் வீரம் மிகுந்த பூமி என்று அங்கு தனது மக்களுடன் வசிக்க துவங்கினார். தனது மூதாதையர் பாஞ்சாலன் பெயரால் அதற்கு பாஞ்சாலங்குறிச்சி என்று பெயரிட்டார். இதுதான் வீரபாண்டிய கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி உருவான வரலாறு. *ஷேர்
மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கினை ஏப்ரல் 2ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
மலர்த்தேன், மலைத்தேன், கொம்புத் தேன் கேள்விபட்டிருப்பீர்கள். மூலிகைத் தேன் கேள்வி பட்டிருக்கிறீர்களா?. நம்ம தூத்துக்குடி, சாயர்புரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் முடக்கத்தான் கொடி பூக்களிலிருந்து தேன் உற்பத்தி செய்து செம லாபம் பார்த்து வருகிறார். தேனே ஆரோக்கியம் மூலிகைத் தேன் சொல்லவா வேணும். இந்த மாதிரி புதுசா யோசிச்சு நீங்களும் பெரிய ஆளா வாங்க மக்களே. யூஸ் புல் தகவல்னா நண்பர்களுக்கும் பகிரவும்
மகாபலிபுரம் கோவளம் கடற்கரையை தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் தூத்துக்குடி, முள்ளக்காட்டில் உள்ள கோவளம் கடற்கரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மிக அழகிய அமைதியான கடல். கடலின் குளிர்ந்த காற்று தாலாட்டும். இதனால் தான் இந்த கடற்கரையை சுற்றுலா தளமாக மாற்றவும் கடல் நீர் சருக்கு விளையாட்டுக்கான இடமாகவும் அரசு தேர்ந்தெடுத்துள்ளது. ஒருமுறை வந்து பாருங்கள் மறக்க மாட்டீர்கள். *நண்பர்களுக்கும் பகிரவும்*
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை – மகன் ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கில் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமின் கோரி மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை இரண்டு மாதங்களில் முடிக்கவும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
வியாழ பகவான், முருகனிடம் தனக்குக் காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழபகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்குக் கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், “செயந்திநாதர்’ என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே “செந்தில்நாதர்’ என மருவியது. தலமும் “திருஜெயந்திபுரம்’ என அழைக்கப் பெற்றது. ஷேர் பண்ணவும்
Sorry, no posts matched your criteria.