India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து இருவர் பலி என தகவல் வெளியாகியுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் தெய்வானை என்ற யானை உள்ளது. இந்நிலையில், இந்த யானை மிதித்து பாகன் உதயன் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் பலியாகியுள்ளனர்.
ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசி கப்பல் இயக்கியவர் என்பது நமக்கு தெரிந்த வரலாறு. ஆனால் அவர் சுதேசி பிரச்சார சபை, தர்ம சங்க நெசவு சாலை, தூத்துக்குடி கைத்தொழில் சங்கம், சுதேசி பண்டகசாலை வேளாண் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை துவக்கியவருமான பிதாமகன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று(நவ.,18) 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் தூத்துக்குடி மாவட்ட மக்கள் முன்னேற்பாடு செய்து கொள்வது நல்லது. SHARE IT.
ஓட்டப்பிடாரம் தொகுதி புளியம்பட்டி என்ற பகுதியில் செயல்பட்டு வரும் குவாரியை மூடக்கோரி சமீபத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அந்த போராட்டத்திற்கு தீர்வு ஏற்படாத காரணத்தினால் இன்று (நவ.18) காலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியினர் பெருந்திரளாக சென்று மனு கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதனை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் ராஜசேகர், இசக்கி துரை, ஆனந்த் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 16 மற்றும் 17 தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் புதிதாக பெயர் சேர்க்க 11,554 படிவங்களும், பெயர் நீக்க 976 படிவங்களும், பெயர் திருத்த முகவரி மாற்ற 8,136 படிவங்களும், ஆதார் இணைக்க 13 படிவங்களும் என மொத்தம் 20,679 படிவங்கள் வரப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது சம்பந்தமான மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது சம்பந்தமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும்; ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு இதன் மூலம் கடைசி ஆணியும் அறையப்பட்டு விட்டது என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று(நவ.17) 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்தி பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன்னேற்பாடுடன் செல்வது நல்லது. SHARE IT.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று(நவ.,16) பரவலாக பல்வேறு இடங்களில் மிதமான மற்றும் பலத்த மழை பெய்தது. அந்த வகையில் மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 42 மில்லி மீட்டர் மழையும், கோவில்பட்டியில் 24 மில்லி மீட்டர் மழையும், தூத்துக்குடியில் 18 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளன. மாவட்டம் முழுவதும் பரவலாக 161.60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
கார்த்திகை மாத முதல் தேதியை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலில் நேற்று(நவ.,16) காலை முதல் இரவு வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. தொடர்ந்து, இரவு கோயில் பிரகாரங்களில் பக்தர்கள் குடும்பத்தோடு கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். இதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Sorry, no posts matched your criteria.