Tuticorin

News November 21, 2024

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

image

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், இரண்டு நாட்களாக திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்ததால் இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

News November 21, 2024

மோசமான வானிலை: தூத்துக்குடி விமானம் திருப்பி விடப்பட்டது

image

தூத்துக்குடியில் மோசமான வானிலை காரணமாக அமைச்சர் வந்த விமானம் திருப்பி விடப்பட்டது. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு அமைச்சர் எ.வ.வேலு கிளம்பிய விமானம் மோசமான வானிலையால் மதுரையில் அவசரமாக தரையிரக்கப்பட்டது. இதை தொடர்ந்து, விமானத்தில் இருந்த பயணிகள் 77 பேர் கார் மூலமாக தூத்துக்குடி சென்றனர்.

News November 21, 2024

தூத்துக்குடியில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(நவ.,21) காலை 10 மணி வரை மிதமான மற்றும் கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. நேற்று மாவட்டத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூர், சூரங்குடி பகுதியில் 61 மில்லி மீட்டர் மழை பெய்த நிலையில் இன்றும் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதை தொர்ந்து, பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

News November 21, 2024

யானைப்பாகன் குடும்பத்திற்கு நிதி உதவி

image

திருச்செந்தூர் கோவில் யானைப்பாகன் உதயகுமார் யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். பக்தர்களிடம் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் இறந்துபோன பாகனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இது விபத்து என்பதால் பாகனின் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News November 21, 2024

தூத்துக்குடி இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (நவ20) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அலுவலகம் சார்பில் தெரிவிக்கக்கபட்டுள்ளது. தெரிவிக்கக்கபட்டுள்ளது.

News November 20, 2024

தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

நெல்லையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தாமிரபரணி ஆற்றில் தற்போது வெள்ளபெருக்கு ஏற்படும் சூழல் இல்லை. இருப்பினும் மழையின் அளவை பொறுத்து ஆற்றில் வரும் நீர் வரத்து கூடவோ, குறையவோ செய்யலாம். நீரின் வேகமும் அதிகமாக இருக்கலாம். பொதுமக்கள் யாரும் தாமிரபரணி ஆறில் இறங்க வேண்டாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் கூறியுள்ளார்.

News November 20, 2024

தூத்துக்குடி கலெக்டர் அறிக்கை வெளியீடு

image

முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் (நவ22) காலை 11 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு மனுக்களை இரட்டை பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் வழங்கி பயன் பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் தேர்வு!

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையிலான மகளிர் கிரிக்கெட் போட்டி 2025 ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இதற்காக, தூத்துக்குடி மாவட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு வரும் 24ஆம் தேதி காலை தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள சான் கிரிக்கெட் அகடாமியில் நடைபெற உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

News November 20, 2024

தூத்துக்குடி, திருச்செந்தூர் DSP-க்கள் மாற்றம்

image

திருச்சுழி DSP-ஆக இருந்த ஜெயநாதன் கோவில்பட்டி DSP-க்கு மாற்றப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் வள்ளியூர் DSP யோகேஷ் குமார் திருச்செந்தூர் DSP-ஆக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்செந்தூர் DSP வசந்த ராஜ் கொங்கு நகர காவல் உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி குற்ற ஆவண காப்பக DSP பொன்ராமு விருதுநகர் மாவட்டம் திருச்சுழிக்கு மாற்றப்பட்டுள்ளார். கோவில்பட்டி DSP வெங்கடேஷ் வள்ளியூருக்கு மாற்றம்.

News November 20, 2024

இலங்கைக்கு கடத்தவிருந்த பீடி இலைகள் பறிமுதல்!

image

தூத்துக்குடி கியூ பிராஞ்ச் போலீசார் இன்று(நவ.,20) அதிகாலை குலசேகரப்பட்டினம் வடக்கூர் கடற்கரையில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை மறித்து சோதனை செய்ததில், இலங்கைக்கு கடத்துவதற்காக 44 பண்டல்களில் 1500 கிலோ பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வேன் டிரைவரானை திருச்சியை சேர்ந்த பிரகாஷையும் கைது செய்தனர்.

error: Content is protected !!