India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி வாகை குளத்தில் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திற்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மெட்டல் டிடெக்டர் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகளுடன் விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட மேயர் ஜெகன், மாநகராட்சி சார்பில் நகர் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தொடர்ந்து ஏராளமான மரங்கள் நடப்பட்டு வருகின்றன. இதனால் தூத்துக்குடியில் 170 வரை இருந்த காற்றின் மாசு தற்போது 57 ஆக குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க டி ஃபார்ம் மற்றும் பி ஃபார்ம் படித்தவர்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது இதற்கான கால அவகாசம் டிசம்பர் 5ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் வாரிசுகள் 80-க்கும் மேற்பட்டோர், ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டார பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதியளித்துள்ளார்.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து சதீஷ்குமார் என்பவர் படகில், மீனவர்கள் 6 பேர் கடந்த 21ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்க சென்ற நிலையில், தற்போது வரை அவர்கள் கரை திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்களின் நிலை குறித்து கண்டுபிடிக்க மாவட்ட நிர்வாகத்திடம் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தூத்துக்குடியில் சதீஸ் என்பவரது படகில் நவ.21 அன்று சதீஸ்குமார்,விக்னேஷ், அல்போன்ஸ், சுதர்ஜன் உளிட்ட 6 மீனவர்கள் மின்பிடிக்கச் சென்றுள்ளனர். நவ. 26 அன்று கரை திரும்ப வேண்டிய இவர்கள் இன்று வரை கரை திருப்பவில்லை. எனவே மீனவர்களையும், படகையும் உடனடியாக மீட்டு தர வேண்டும் என திரேஸ்புரம் நாட்டுப் படகு மீனவ சங்கத்தினர் தூத்துக்குடி மீன்வளத்துறை அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர்.
தமிழகத்தில் பெங்கல் புயல் அதிதீவிர புயலாக உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் விமானம் ஆனது தற்போது முற்றிலுமாக நாளைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடியில் இருந்து சென்னை,அல்லது சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான சேவை இருக்காது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (நவ.29) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது அவசரகால எண் 100, மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் தோப்பு தெருவை சேர்ந்தவர் காத்த்திக் குமார் (32) . இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக இவரை முத்தையாபுரம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மகிலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று கார்த்தி குமாருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
சாத்தான்குளம் அருகே ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. நாளடைவில் அந்தப் பெண் கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்குப் பதிந்து அந்த மாணவரை தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.