Tuticorin

News February 9, 2026

தூத்துக்குடி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

தூத்துக்குடி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <>க்ளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 9, 2026

தூத்துக்குடி: பாலியல் குற்றவாளிகளுக்கு குண்டாஸ்.!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி நகர்ப் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (26) மற்றும் போக்சோ குற்றவாளி இசக்கிமுத்து (45) ஆகிய இருவவரையும், மாவட்ட கண்காணிப்பாளர் சிலம்பரசன் பரிந்துரைப்படி, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

News February 9, 2026

தூத்துக்குடி: மருமகன் தள்ளிவிட்டதில் மாமியார் பலி.!

image

முள்ளக்காடு அருகே உள்ள அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் பாப்பா (75). இவரது மகள் சுப்பு ராணியை முத்தையாபுரத்தை சேர்ந்த லிங்கதுரை திருமணம் செய்திருந்தார். சுப்புராணி இறந்து விடவே லிங்கதுரை இன்று மாமியார் வீட்டிற்கு வந்து மனைவியின் நகையை கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் லிங்கதுரை மாமியாரை தள்ளிவிட்டதில், அவர் கீழே விழுந்து உயிரிழந்தார். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 9, 2026

தூத்துக்குடி: மருமகன் தள்ளிவிட்டதில் மாமியார் பலி.!

image

முள்ளக்காடு அருகே உள்ள அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் பாப்பா (75). இவரது மகள் சுப்பு ராணியை முத்தையாபுரத்தை சேர்ந்த லிங்கதுரை திருமணம் செய்திருந்தார். சுப்புராணி இறந்து விடவே லிங்கதுரை இன்று மாமியார் வீட்டிற்கு வந்து மனைவியின் நகையை கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் லிங்கதுரை மாமியாரை தள்ளிவிட்டதில், அவர் கீழே விழுந்து உயிரிழந்தார். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 8, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இன்று (08.02.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் (95141 44100) எண்ணை தொடர்பு கொள்ளவும். இந்த செய்தியை மற்றவர்களுக்கு பகிர் பண்ணுங்கள்.

News February 8, 2026

தூத்துக்குடி: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

தூத்துக்குடி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் -1 என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News February 8, 2026

தூத்துக்குடி: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!

image

தூத்துக்குடி மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIனு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 8, 2026

தூத்துக்குடி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

தூத்துக்குடி மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE

News February 8, 2026

தூத்துக்குடியில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 19 ஆண்கள், 3 பெண்கள், 5 மீனவ இளைஞர்கள் என மொத்தம் 27 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10-ம் வகுப்பு படித்த 18 முதல் 45 வயது உடையவர்கள் வரும் 12-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை தூத்துக்குடியில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது

News February 8, 2026

தூத்துக்குடி எஸ்பி எச்சரிக்கை

image

தூத்துக்குடியில் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு விசாரணைக்கு ஆஜராகாத 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 17 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 குற்றவாளிகள் மீது பிணைப்பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!