Tuticorin

News March 31, 2025

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்

News March 30, 2025

தூத்துக்குடி: கோவில்பட்டியில் நோய் தீர்க்கும் ஆலயம்

image

கோவில்பட்டியில் அருள்மிகு செண்பகவல்லி பூவனகர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகளை தாண்டி பழமையான இந்த கோயிலில் கிழக்குப் பார்த்தபடி மூலவர் காட்சி தருகின்றனர். அகத்திய முனிவர் உருவாக்கிய அகத்தியர் தீர்த்தம் இந்த கோவிலின் சிறப்புகளில் ஒன்று. இந்த ஆலயத்தில் வேண்டினால் பக்தர்களுக்கு தீராத நோயும், குறைவில்லா குழந்தை பேரும், நல்ல மண வாழ்க்கையும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *SHARE IT*

News March 30, 2025

தூத்துக்குடி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு 

image

நமது தூத்துக்குடியில் விஜய் இன்ஃபோ மீடியா மற்றும் ஜாய் யுனிவர்சிட்டி இணைந்து நடத்தும் +2,டிப்ளமோ, டிகிரிக்கு பிறகு மாணவர்கள் என்ன படிக்கலாம்? என்ற ஆலோசனைக் கருத்தரங்கு ராஜ் திருமண மண்டபம், பழைய பேருந்து நிலையம் அருகில் வைத்து நாளை திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இது சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் பிரபலம் முத்துக்குமாரன் பங்கேற்கிறார். அனுமதி இலவசம். ஷேர்

News March 30, 2025

போக்சோ வழக்கு – இருவர் மீது குண்டாஸ்

image

தூத்துக்குடி எஸ்.பி  ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர்  இளம்பகவத் உத்தரவின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரால் போச்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட செல்வன், புதுக்கோட்டை போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட மடத்தூரை சேர்ந்த ராகுல் ஆகியோர் நேற்று முன் தினம் (மார்ச்-28) குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

News March 29, 2025

தூத்துக்குடி: பில்லி சூனியம் விலக செய்யும் மந்திர மை

image

தூத்துக்குடி, ஏரல் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ளது சேர்மன் அருணாசல சுவாமி கோவில். இங்கு பேய் பில்லி சூனியம் பிடித்தவர்களுக்கு மந்திர மை ஒன்று வழங்கப்படுகிறது. ஆல், அரசு, வேம்பு, துளசி, வில்வம், சந்தனம், கற்பூரம் ஆகியவற்றை யாகத்தில் நெய் ஊற்றி பஸ்மாக்கி அதனை சுவாமி முன்வைத்து வழிபாடு செய்து வழங்குகிறார்கள். இந்த மையை இட்டால் பேய் பில்லி சூனியம் விலகும் என்பது நம்பிக்கை. *தேவைபடுவோருக்கு பகிரவும்*

News March 29, 2025

தூத்துக்குடியில் குடிநீர் பஞ்சத்தால் அழிந்த கிராமம்

image

தூத்துக்குடியில் ஒரு கிராமமே காணாமல் போய்விட்டது எனக் கூறினால் நம்பமுடிகிறதா?. ஆம், தூடி-நெல்லை சாலையில் பொட்டலூரணி அருகே உள்ள மீனாட்சிபுரம் தான் அது. ஒருகாலத்தில் செல்வ செழிப்பாக இருந்த இக்கிராமம், திடீரென ஏற்பட்ட கடும் தண்ணீர் பஞ்சத்தால் தற்போது வீடுகள் அனைத்தும் உடைந்தும் மரங்கள் முளைத்தும் ஆள் அரவமின்றி அனாதையாக காட்சியளிக்கிறது. *இவ்வூரை பற்றி தெரியுமா? தெரியாதவர்களுக்கு பகிரவும்.

News March 29, 2025

தூத்துக்குடி நீதிபதி அதிரடி உத்தரவு

image

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 15 பேர் ஜாமீன் பெற்றுக்கொண்டு பின்னர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தனர். இது குறித்து விசாரணை நடத்திய தூத்துக்குடி நீதிபதி கனிமொழி இந்த வழக்குகளில் ஆஜராகாமல் உள்ள 15 பேரும் குற்றவாளிகள் தான் என நேற்று (மார்ச்-28) அதிரடி உத்தரவிட்டார்.

News March 29, 2025

தூத்துக்குடி: குடும்ப தகராறில் தீக்குளித்து தற்கொலை

image

செய்துங்கநல்லூர் அருகே உள்ள விட்டிலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு ஈஸ்வரி (50) என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் ஈஸ்வரி திடீரென மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக்கொண்டார். நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் நேற்று (மார்ச்-28) அதிகாலையில் அவர் பரிதாபமாக இறந்தார். போலீசார் விசாரணையில் குடும்ப தகராறில் தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

News March 29, 2025

தூத்துக்குடி வருகிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு

image

கனிமொழி எம்.பி யின் பெருமுயற்சியினால் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோருக்கான ‘புத்தொழில் களம்’ நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டின் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொள்ள உள்ளார் என தூத்துக்குடி எம்.பி கனிமொழி அறிவித்துள்ளார்.

News March 29, 2025

தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!