India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரத்தில் புதியதாக துவங்கி உள்ள கனரா வங்கியை நேற்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M.S தரணிவேந்தன் MP அவர்கள் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து துவக்கி வைத்தார்.உடன் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் S.அம்பேத்குமார் வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தொகுதி வெம்பாக்கம் ஒன்றியம் குத்தனூர் ஊராட்சியில் திமுக கொடி ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்து நிர்வாகிகளுக்கு திமுக கழக உறுப்பினர் அடையாள அட்டையை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M.S தரணிவேந்தன் MP வழங்கினார். உடன் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி தலைமை செயற்குழு உறுப்பினர் R.வேல்முருகன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதிசீனிவாசன் உள்பட பலர் இருந்தனர்.
தீபாவளி பண்டிகை 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி அன்று குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது இறுக்கமான பருத்தி ஆடையை அணிய வேண்டும். தளர்வான ஆடைகளை அணியக்கூடாது. பெரியவர்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகள் வெடிக்க வேண்டும். பட்டாசுகளை பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனை அருகில் வெடிக்க செய்தல் கூடாது. என்று திருவண்ணாமலை மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணன் தெரிவித்து உள்ளார்.
சாத்தனூர் அணை நிரம்பி வருவதால் மதகுகளின் வழியே தண்ணீர் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொளமஞ்சனூர், திருவடத்தனூர், புதூர் செக்கடி, எடத்தனூர், ராயண்டபுரம், அகரம்பள்ளிப்பட்டு, உலகலாப்பாடி, வாழவச்சனூர் மற்றும் சதாகுப்பம் உள்ளிட்ட 14 கிராமங்கள் வழியாக வெள்ள நீர் செல்வதால் கரையோர மக்கள் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 652 பணிகளுக்கான தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நேற்று தமிழ்நாடு முழுவதும் தேர்வு நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1741 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 6 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 917 பேர் மட்டுமே தேர்வு எழுதி இருந்தனர். 824 பேர் தேர்வு எழுதவில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டின் துவக்க விழாவில் தி.மலை மாவட்ட கலைக்குழுவினர் கலந்து கொண்டு பறை இசை, மேளம், நடன கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி மாநாட்டை துவக்கி வைத்தனர். மேலும் மாநாட்டில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற பின்னர் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சிறப்புரை ஆற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை 27-10-2024, தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
திருவண்ணாமலையில் இயங்கி வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் திங்கள்கிழமை (அக். 28)வெண்பன்றி வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.மேலும், விவரங்களுக்கு 04175-298258,9551419375 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
திருவண்ணாமலை மாவட்டம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி குறை தீர்வு கூட்டம் வருகின்ற திங்கட்கிழமை 28-10-2024 செய்யாறு டிடிசிசி வங்கியில் காலை 9 மணி முதல் மாலை 5:45 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உறுப்பினராக உள்ள தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர், பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலுவின் நாளை மற்றும் நாளை மறுநாள் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இன்று திமுக மாவட்டச் செயற்குழு கூட்டம், 27ஆம் தேதி காலை ஒட்டல் திறப்பு விழா, உணவு திருவிழா, மாலை தண்டராம்பட்டில் நடைபெறும் கலை நிகழ்ச்சி கலந்து கொள்ளுதல், 28ஆம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம் ஆய்வு, செயற்குழு கூட்டம் கலந்து கொள்கிறார்.
Sorry, no posts matched your criteria.