Tiruvannamalai

News November 7, 2024

தி.மலை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

தி.மலை மாவட்ட காவல் துறையினரால் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 06-ம் தேதி காலை 8.00 மணிமுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களால் 09.11.2024-ம் தேதி காலை 8.00 மணிமுதல் வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படும் என்பதை தெரிவித்தனர்.

News November 6, 2024

அரசு பேருந்து சக்கரம் ஏறியதில் பெண் பலி

image

சந்தவாசல், கொட்டா ரெட்டிப்பாளைரம் சேர்ந்த கௌதமி (25) கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். இன்று டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தில் படித்துவிட்டு வீடு செல்வதற்காக கண்ணமங்கலம்-போளூர் அரசு பேருந்தில் இருக்கை பிடிப்பதற்காக முயற்சித்துள்ளார். அப்போது பேருந்தின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண்ணமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 6, 2024

ரயில் தாம்பரம் வரை நீட்டிப்பு

image

திருவண்ணாமலை போளூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த ரயில் போக்குவரத்து தற்போது திருவண்ணாமலையிலிருந்து போளூர், வேலூர், காட்பாடி, அரக்கோணம் வழியாக சென்னை கடற்கரை வரை இயக்கப்பட்ட ரயில் நவம்பர் 7ஆம் தேதி முதல் தாம்பரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பயணிகள் நெரிசலை தவிர்க்க 12 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News November 6, 2024

ரேஷன் கடைகளில் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், தி.மலை மாவட்டத்தில் 120 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

News November 6, 2024

ஆரணியில் எரிவாயு நுகர்வோர் பாதுகாப்பு குறைதீர்வு கூட்டம்

image

ஆரணி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கிய எரிவாயு நுகர்வோர் பாதுகாப்பு குறைதீர்வு கூட்டம் நாளை காலை 11 மணி அளவில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடக்கிறது. எனவே, எரிவாயு நுகர்வோர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு உதவி கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 5, 2024

நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து

image

வந்தவாசி அடுத்த ஆராசூர் கிராமத்தில் இன்று போளூர்- சென்னை நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது பால் ஏற்றி வந்தவாசி நோக்கிச் சென்ற லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக ஓட்டுனர் உள்ளிட்டோருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.

News November 5, 2024

சாத்தனூர் அணையின் இன்றைய நிலவரம்

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணை சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று அணையின் முழு கொள்ளவு 119 கனஅடியாகவும், அணையின் தண்ணீர் இருப்பு 117.10 அடியாகவும் அணைக்கு வீனாடிக்கு தண்ணீர் வரத்து : 1100 கன அடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 850 கன அடியாகவும் உள்ளது.

News November 5, 2024

தி.மலையில் 467 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 467 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், வருவாய் கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News November 5, 2024

தி.மலை: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில், கார்த்திகை தீபத் திருவிழாவின் பத்தாம் நாள் அன்று, திருக்கோயில் உள்ளே பரணி தீபத்துக்கு 7,500 பக்தர்களும், மகா தீபத்துக்கு 11,500 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள். 2,668 அடி உயரம் உள்ள திருவண்ணாமலையின் உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தை தரிசிக்க 2000 பக்தர்களுக்கு மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News November 5, 2024

பக்தர்களுக்கு அனுமதி குறித்து ஆட்சியர் அறிவிப்பு

image

தி.மலை தீபத் திருநாளன்று பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. பரணி தீபம் அன்று 7,500 பக்தர்களும், மகா தீபம் அன்று கோயிலுக்குள் 11,500 பேரும் அனுமதிப்பதுடன் தீபம் அன்று முன்னுரிமை அடிப்படையில் 2,000 பக்தர்கள் தீப மலையை ஏற அனுமதி. ஆன்லைன் மூலம் பரணி தீபத்திற்கு 500, மகா தீபத்திற்கு 1,100 கட்டண டிக்கெட் வழங்கப்படும்.

error: Content is protected !!