India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் டெலிவரி ஆக தாமதம் ஆகுதா? இனி கவலை வேண்டாம். நாம் கேஸ் சிலிண்டர் புக் செய்தால், அடுத்த 48 மணிநேரத்திற்குள் டோர் டெலிவரி செய்யவேண்டும் என்பது விதி. ஆனால் பலர் ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குப் பிறகு கூட அதைப் பெறுகிறார்கள். அவசர காலத்தில் இப்படி இழுத்தடித்தால் இனி இந்த நம்பரில் (1906, 1800-2333-555) புகார் செய்யுங்கள். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!
பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சொா்ணவாரி நெல் மற்றும் காரீப்பருவ நிலக்கடலை, கம்பு பயிா்களுக்கு பிரீமியம் தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று
திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா். தெரிந்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
தி.மலை மாவட்ட மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
தி.மலை மாவட்டத்தில் இன்று (ஆக.14) செங்கம், கலசப்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு, ஆரணி, வெம்பாக்கம் ஆகிய பகுதிகளின் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இடங்களின் முகவரி விவரங்களை மேலே உள்ள படத்தில் காணலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஓய்வூதியம், ரேஷன் அட்டை, ஆதார் திருத்தம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் எங்கும் அலையாமல் ஒரே இடத்தில மனுவாக அளித்து பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஆக.14) செங்கம் வட்டாரத்தில் மேல்பென்னாத்தூர் சமுதாயக்கூடம், கலசப்பாக்கம் வட்டாரத்தில் ரஜினி மண்டபம், வந்தவாசி வட்டாரத்தில் தென்சேந்தமங்கலம் விபிஆர்சி கட்டடம், சேத்துப்பட்டு வட்டாரத்தில் ஜேபிஜே மஹால், ஆரணி மேற்கு வட்டாரத்தில் சி.எம்.வளர்மதி மண்டபம், வெம்பாக்கம் வட்டாரத்தில் சட்டுவந்தாங்கல் விபிஆர்சி கட்டடம் ஆகிய பகுதிகளின் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளி
பட்டதாரி தமிழ் ஆசிரியர் இரா.முத்து கம்பன் அவர்கள், சர்வதேச அளவிலான Global Best Teacher Role Model Award விருதைப் பெறுகிறார். வரும் 24.08.2025 அன்று, புது டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது.
ஏற்கனவே இவர், மாநில அளவில் தமிழக அரசின் Dr. ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று(ஆக.13) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் திருவண்ணாமலை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஆக.13) கள ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட தொழில் மையம் மூலமாக தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று செயல்பட்டுவரும் பல் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 132 விவசாயிகளிடமிருந்து 10,712.387 டன் கரும்பு பெறப்பட உள்ளது. அகல பார் அமைத்து பருசீவல் நாற்று, ஒரு பருக்கரணை நடவு உள்ளிட்ட முறைகளுக்கு மாநில அரசு மற்றும் மத்திய திட்டங்கள் மூலம் ஹெக்டருக்கு ரூ.3,000 – ரூ.18,625 வரை மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் அதிக அளவில் கரும்பு நடவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <
Sorry, no posts matched your criteria.