India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆரணி அருகே லோகநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரோகிணி என்பவர் திருமணமாகி 8 மாதம் மட்டுமே ஆகும் நிலையில், இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒரு மாதத்திற்கு முன் லோகநாதனின் பெற்றோர் வரதட்சணை கேட்டதாக கூறப்படும் நிலையில், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு வரதட்சணை கொடுமையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கீழ்பென்னாத்தூர் அருகே கார்ணம்பூண்டி கிராமத்தை சேர்ந்த அரவிந்த் (20), 2020-ஆம் ஆண்டு 8 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை நடத்திய வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காஞ்சனா, ஆகஸ்ட் 14 நேற்று அவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
தி.மலை மாவட்டத்தில் உள்ள வரலாற்று சின்னங்கள் சிலவற்றை தொகுத்துள்ளோம். 1.சீயமங்கல குடைவரைக் கோவில், 2.வந்தவாசி துறைமுகம், 3.வேட்டவலம் ஜமீன் அரண்மனை, 4.கூழமந்தல் சோழிஸ்வரர் கோவில், 5.ஜமுனாமரத்தூர் பெருங்கல்குகை, 6.ஆரணி ஜாகிர் ராணி அரண்மனை, 7.காந்தியை சிறைவைத்த தூசி காவல்நிலையம், 8.மாமண்டூர் குடைவரை கோவில், 9.சேத்துப்பட்டு வெள்ளை மகால். இந்த 3 நாள் விடுமுறைல இங்கு போயிட்டு வாங்க. கட்டாயம் பகிருங்கள்*
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை சேர்ந்தவர் அரவிந்த்(20). இவர் கடந்த 7.3.2020அன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று அந்த மனித மிருகத்திற்கு வாழ் நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து, தி.மலை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் <
“திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். எடப்பாடி கே.பழனிசாமியை வரவேற்க ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், மாவட்டச் செயலா்கள் எல்.ஜெயசுதா, தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் தலைமையில் வழிநெடுகிலும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 14/08/2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கடிதப் போக்குவரத்து மற்றும் சேமிப்புக் கணக்குகள் தொடர்பான புதிய மென்பொருள் இந்திய அஞ்சல் அலுவலகங்களில் ஆகஸ்ட் 2, 2025 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும், இந்த புதிய மென்பொருள் பதிவுத் தபால் ரசீதுகள் மற்றும் சேமிப்பு பரிவர்த்தனைகளை வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. சேவைகளை விரைவாக வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடிதப் போக்குவரத்து மற்றும் சேமிப்புக் கணக்குகள் தொடர்பான புதிய மென்பொருள் இந்திய அஞ்சல் அலுவலகங்களில் ஆகஸ்ட் 2, 2025 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும், இந்த புதிய மென்பொருள் பதிவுத் தபால் ரசீதுகள் மற்றும் சேமிப்பு பரிவர்த்தனைகளை வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. சேவைகளை விரைவாக வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தி.மலை மக்களே, வங்கியில் பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்?. IOB-யில் தொழிற்பயிற்சிக்கு 750 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில் தமிழகத்தில் 200 பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆக 20-க்குள் <
Sorry, no posts matched your criteria.