Tiruvannamalai

News April 20, 2025

திருவண்ணாமலை மாவட்ட தாசில்தார் எண்கள்

image

▶️தாசில்தார், ஜவ்வாதுமலை – 9626457393
▶️தாசில்தார், கீழ்பென்னாத்தூர் – 7825873657
▶️தாசில்தார், வெம்பாக்கம் – 04182247272
▶️தாசில்தார், சேத்துப்பட்டு – 7708230676
▶️தாசில்தார், வந்தவாசி – 9445000514
▶️தாசில்தார், செய்யாறு – 9445000513
▶️தாசில்தார், ஆரணி – 9445000515
▶️தாசில்தார், போளூர் – 9445000517
▶️தாசில்தார், கலசபாக்கம் – 04181241050
▶️தாசில்தார், தண்ராம்பட்டு – 7825873656
ஷேர் பண்ணுங்க மக்களே

News April 20, 2025

திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் தற்கொலை

image

ஆரணி, பையூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் தமிழ்ச்செல்வன், கூலி வேலை செய்து வந்தார். தந்தையிடம் திருமணம் செய்து வைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். அதற்கு அவரது தந்தை குடும்ப சூழ்நிலை காரணமாக நாட்களை கடத்தி உள்ளார். இதனால் மன விரக்தியில் இருந்த அவர் தான் வேலை செய்யும் செங்கல் சூளையில் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2025

எந்த கிழமையில் கிரிவலம் சென்றால் என்ன பலன்?

image

▶ஞாயிறு – சிவலோக பதவி கிடைக்கும், நோய்கள் நீங்கும்
▶திங்கள் – பாவ கணக்கு குறைந்து, புண்ணிய கணக்கு மேலோங்கும்
▶செவ்வாய் – கடன் தீரும், தீவினைகள் போகும், வறுமை நீங்கும்
▶புதன் – கலைகளில் நல்ல வளர்ச்சி, மோட்சம் கிடைக்கும்
▶வியாழன் – குரு அருள் கிடைக்கும். ஞான சித்தி ஏற்படும்
▶வெள்ளி – செல்வ நலன் கிடைக்கும், குழந்தை பேறு கிடைக்கும்
▶சனி – பிறவிப் பிணி போகும். வியாபாரத்தில் உச்ச நிலை ஏற்படும்

News April 19, 2025

திருமணத் தடை நீக்கும் திருவண்ணாமலை சனிபகவான்

image

ஆரணி படவேடு சாலையில் ஏரிக்குப்பத்தில் அமைந்துள்ளது எந்திர சனீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் சனிபகவான் வேறெங்கும் இல்லாதவாறு எந்திர வடிவில் காட்சியளிக்கிறார். இந்த ஆலயத்தில் தாயார் சாயா தேவி உடன் இருப்பதால் சாந்த ரூபத்தில் இருக்கிறார். இந்த ஆலயத்தில் வந்து சனி பகவானை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

image

போக்குவரத்து கழகத்தில் 1004 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News April 19, 2025

விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலி

image

ஆரணி, அக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயியான இவர் உடல்நிலை குறைவால் நீண்ட காலம் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் விஷத்தை அருந்தி உள்ளார். ஆபத்தான நிலையில் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

News April 19, 2025

ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

image

திருவண்ணாமலை, கலசபாக்கம் அடுத்த தேவராயம் பாளையத்தை சேர்ந்தவர் ஐயப்பன் (8). பள்ளி விடுமுறை என்பதால் நேற்று (ஏப்ரல்.18) ஏரியில் குளிக்க சென்று நீரில் மூழ்கி உள்ளார். அந்த வழியாக சென்ற மக்கள் சிறுவனை மீட்டு ஆதமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 18, 2025

தீராத நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில்

image

ஒவ்வொரு மனித உடலும் ஆலயம் போன்றது என்பது சித்தர்களின் வாக்கு. பணம், பதவி எது இருந்தாலும் நோய்நொடி இல்லாத வாழ்க்கையே சிறந்த செல்வம். தீராத நோய்களை தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உக்கலில் அமைந்துள்ளது. இங்கு நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து, இறைவனின் கட்டளைக்குப் பணிந்து பக்தர்களின் நோய்களையும் தோஷங்களையும் போக்குவதாக ஐதீகம். ஷேர் பண்ணுங்க

News April 18, 2025

இலவச கல்வி; விண்ணப்பிப்பது எப்படி?

image

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மாணவர்களுக்கு எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படும். தேவையான ஆவணங்கள்: வருமானச் சான்றிதழ், இருப்பிடம் சான்றிதழ், சாதிச் சான்றிதழ். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. rte.tnschools.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News April 18, 2025

இலவச கோடை கால விளையாட்டுப் பயிற்சி

image

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் இலவச கோடைகால விளையாட்டுப் பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. ஏப்.24 -ஆம் தேதிக்குள் தங்களது ஆதார் அடையாள அட்டை மற்றும் 2 புகைப்படம் ஆகியவற்றை நேரில் கொண்டு பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் அலுவலரை 7401703484 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

error: Content is protected !!