Tiruvannamalai

News April 22, 2025

14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்

image

திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு, கடந்த 11ம் தேதி கட்டாய திருமணம் நடந்ததாக சைல்ட் ஹெல்ப் லைன்(1098) மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவண்ணாமலை ஒன்றிய ஊர்நல அலுவலர்கள், சிறுமியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். மேலும், கட்டாயத் திருமணம் செய்த ஈஸ்வரன்(24), தந்தை கோவிந்தன், தாய் அம்பிகா ஆகியோர் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News April 21, 2025

தி.மலையில் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா தலங்கள்

image

▶️ திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
▶️ இரமணமகரிசி ஆசிரமம் (அருணாச்சல மலையின் அடிவாரம்)
▶️ ஆரணி கோட்டை (ஆரணி பாளையம் )
▶️ சாத்தனூர் அணை
▶️ சவ்வாது மலை (கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஒன்று )
▶️ மாமண்டூர் குகைகள் (வெம்பாக்கம் )
▶️ பீமன் நீர்விழுச்சி (ஜமுனாமுத்தூர்)
▶️பர்வதமலை
ஷேர் பண்ணுங்க மக்களே!
▶️திருமலை ஜெயின் கோயில் (திருமலை)
▶️ ஸ்ரீ பாண்டு ரங்கா பெருமாள் கோயில் (தென்னங்கண்ணூர்)

News April 21, 2025

தி.மலை ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஏப்ரல்.21) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News April 21, 2025

புத்திர பாக்கியம் அருளும் வாலீஸ்வரர்

image

தி.மலை, குரங்கணில் மூட்டலில் அமைந்துள்ளது அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில். இங்கு சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சாமி மீது சூரிய ஒளி விழுகிறது. பாவ விமோசனம் பெற, சனி தோஷம் நீங்க இங்கே வழிபடலாம். திருமணம் முடிந்தவர்களும் கர்ப்பிணி பெண்களும் இங்கு உள்ள அம்பாளுக்கு வளையல் அணிவித்து பின் அதை அணிந்து கொள்கின்றனர். இதன் மூலம் புத்திர பாக்கியமும் சுகப்பிரசவமும் நடக்கும் என்பது நம்பிக்கை.

News April 21, 2025

கொளுத்தும் வெயில் தப்பிக்க எளிய டிப்ஸ்

image

திருவண்ணாமலையில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS,எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

image

அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் – நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். இன்றே (ஏப்.21) கடைசி தேதி என்பதால் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

திருவண்ணாமலையில் புதிய மினி டைடல் பூங்கா

image

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. ரூ.34 கோடி செலவில், 4 தளங்களுடன் இந்த டைடல் பூங்கா அமைக்கபட உள்ளது. ஓராண்டில் இதன் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் புதிய மினி டைட்டில் பூங்கா அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்திருந்தார். இதன்மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும்.

News April 21, 2025

முன்னாள் ஊராட்சித் தலைவர் பைக் மோதி பலி

image

திருவண்ணாமலையை அடுத்த இசுக்கழி காட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி(58). முன்னாள் ஊராட்சித் தலைவர். இவர், நேற்று இரவு தண்டரை கிராமத்தில் இருந்து வீட்டுக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். இசுக்கழி காட்டேரி கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த பைக், பழனி ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வெறையூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2025

மே 15 வரை அவகாசம் – ஆட்சியர் எச்சரிக்கை

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே 15 ஆம் தேதிக்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவுறுத்தியுள்ளார். அதன் பின்னர் தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, அபராதம் விதித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 20, 2025

திகிலூட்டும் தொடர் கொள்ளை

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த எறும்பூர் கிராமத்தில், ஒரே நாளில் இரவு நேரத்தில் 8 வீடுகளின் பூட்டை உடைத்து ஐந்து சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வந்தவாசி பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

error: Content is protected !!