India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் போலீஸ் எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையம்- 04182-220620, திருவண்ணாமலை -04175-253144, போளூர் -04188-224499, வந்தவாசி- 04183-227593, ஆரணி-04173-226684, செங்கம்-04188-224100. இந்த எண்களை உங்கள் வீட்டு மற்றும் அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.
அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். ஆனால், இவற்றை வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும்.
தி.மலை மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் 25.04.2025 அன்று கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், வேளாண்துறை & விவசாயம் சார்ந்த துறை அலுவலர்கள், வங்கியாளர்கள் மற்றும் பிற சார்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் & கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கவுள்ளனர். இதில், விவசாயிகள் & விவசாய சங்கத்தினர் கலந்துக் கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மலை அரசு கல்வி நிறுவனங்களின் தொடர்பு எண்களை தெரிஞ்சிக்கோங்க. தி.மலை அரசு கலைக் கல்லூரி- 04175-236553, தி.மலை ஐடிஐ-04175-233018, நாகம்பாடி பாலிடெக்னிக் கல்லூரி-9360535511, ஆரணி பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி-04173-244400, செய்யாறு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி-04182-225313, கீழ்பெண்ணாத்தூர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் -04175-242308. *அட்மிசன் விவரங்களை தெரிந்துகொள்ள 12th மாணவர்களுக்கு பகிரவும்*
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவில் ரொம்ப ஸ்பெஷல். சிறிய குகை போன்று உள்ள இக்கோவிலுக்குள் ஒருகளித்துப் படுத்தவாறு தான் நுழைய முடியும். இங்கு வருபவர்கள், ‘இடுக்கு பிள்ளையார் இருக்க இடுப்பு வலி எதற்கு?’ என சொல்வர். இங்கு வழிபட்டால் இடுப்பு, தலை, கை, கால் வலி அனைத்தும் பறந்து போகும் என பக்தர்கள் அடித்து சொல்கின்றனர். *இடுக்கு பிள்ளையாரை நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்*
திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘TN SMART’ இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை <
திருவண்ணாமலையில் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 42 அங்கன்வாடி பணியிடங்கள், 47 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இன்றைக்குள்(ஏப்.23) <
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் உழவா் உரிமை இயக்க கோரிக்கையால், செங்கம் சுற்றுவட்டாரப் பகுதி வாகனங்களுக்கு சுங்கவரி ரத்து செய்யப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனா். இதில், செங்கம் பகுதிக்கு உள்பட்ட 10 கி.மீ. தொலைவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் சுங்கவரி ரத்து செய்யப்பட்டு, அவா்களுக்கு சுங்கச்சாவடியில் தனிவழி மற்றும் பாஸ் வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், 9445855768 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் <
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், எஸ்.ஐ பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 30.04.2025 அன்று முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 04175-233381 என்ற அலுவலக தொலைப்பேசி எண்ணை தொடர்புகொண்டு, தங்கள் பெயரைப் பதிவுசெய்ய வேண்டும். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.