Tiruvannamalai

News January 24, 2025

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல்

image

பட்டு நெசவாளர்களுக்கு மானிய விலையில் கைத்தறி உபகரணங்கள் சில்க் சமாக்ரா-2 திட்டத்தின் கீழ் பட்டு கைத்தறி நெசவாளர்கள் மானிய விலையில் தறி உபகரணங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News January 24, 2025

தி.மலை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல் 

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தலைக்கவசம் அணியாமல் சென்றால் உயிர் போகவும் வாய்ப்புள்ளது. விழிப்புடன் இருப்பீர்! விபத்தை தவிர்ப்பீர்! என்பதை வலியுறுத்தி மாவட்ட காவல்துறை சார்பாக இன்று சமூக வலைத்தளப் பக்கத்தில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தலை கவசம் உயிர் கவசம் என்பதை மறவாதீர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க. 

News January 24, 2025

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய வளாகத்தில், இன்று (ஜன.24) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381

News January 24, 2025

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு தேசிய விருது

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நேர்த்தியாகவும் திறம்பட செய்து முடித்ததற்காக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய விருது, நாளை (ஜன.25) வாக்காளர் தினத்தன்று வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் கலெக்டருக்கு விருது கிடைச்சிருக்கு. பாராட்டலாமே.. SHARE பண்ணுங்க

News January 24, 2025

திருவண்ணாமலை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை

image

திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துர்க்கை நம்மியந்தல், வட ஆண்டாப்பட்டு, வட அரசம்பட்டு, கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, மலப்பாம்பாடி, தென் அரசம்பட்டு, வள்ளிவாகை, கிளியாப்பட்டு, சானானந்தல், குன்னியந்தல், களஸ்தம்பாடி, சடையனோடை, குன்னுமுறிஞ்சி, சேரியந்தல், தாமரை நகா், ஆடையூா், மல்லவாடி, நாயுடுமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (ஜன.25) காலை 9 மணி – மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

News January 24, 2025

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த ஆரணி எம்எல்ஏ

image

ஆரணி நகராட்சியுடன் சேவூர் முள்ளிப்பட்டு இராட்டினமங்கலம் இரும்பேடு பையூர் ஆகிய ஊராட்சிகளை இணைக்கக் கூடாது என்ற கிராம மக்களின் கோரிக்கை ஏற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியனிடம் ஆரணி எம்.எல்.ஏ அதிமுக சேவூர் எஸ்.ராமச்சந்திரன் இன்று மனு வழங்கினார். 

News January 23, 2025

ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (23.01.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 23, 2025

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு தேசிய விருது

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை திறம்பட செய்து முடித்ததற்காக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது தேசிய, வரும் 25ஆம் தேதி வாக்காளர் தினத்தன்று வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க

News January 23, 2025

கடன் வழங்கும் செயலியை நம்பி ஏமாறாதீர்கள்

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக, சமூக வலைத்தளங்களில் தினமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஜன.23), “போலி கடன் செயலிகள் மூலம் உங்களுக்கு உடனடியாக பணம் கிடைக்கும். ஆனால், அவ்வாறான செயலிகள் உங்களை ஏமாற்றக்கூடும். விழிப்புடன் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்” என விழுப்புணர்வு புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்ற எளிதாக கடன் வழங்கும் செயலியை நம்பி ஏமாறாதீர்கள்.

News January 23, 2025

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சாலை மறியல்

image

திருவண்ணாமலையில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக ஊழியர்கள், மத்திய பேருந்து நிலையம் அருகே நேற்று (ஜன.22) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

error: Content is protected !!