India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பிப்ரவரி 1 முதல் முதற்கட்டமாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூரிலிருந்து வரும் பேருந்துகள் மாட வீதியை தவிர்த்து பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (30.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
வாணாபுரம் அருகே உள்ள தென்கரும்பலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருளப்பன் (55). இவர், ஏரி பகுதி யில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கியை வைத்திருந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருளப்பனை கைது செய்து, நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
குழந்தைத் திருமணத்திதை ஆதரித்து திருமணத்திற்கு சாப்பிட வருவோர், சீரியல் லைட் கட்டுவோர், செல்பி எடுப்பவர்கள்புகைப்படம் எடுப்பவர்கள் என அனைவரின் மேலும் தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும், அபராதங்கள் விதிக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் பேசியுள்ளார். இது குழந்தை திருமண செய்பவர்களுக்கு எச்சரிக்கையாக விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஜன.30) மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிறுப்பாக்கம், தென்மாத்தூர், மேல்செட்டிப்பட்டு, தச்சம்பட்டு, மெய்யூர், வெறையூர், சாவல்பூண்டி, வரகூர், அத்தியந்தல், சாந்திமலை, கச்சிராப்பட்டு, காம்பட்டு, நாச்சானந்தல், புத்தியந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்கள்
திருவண்ணாமலை பகுதிகளில் இன்று (ஜன.30) மின்வாரிய பராமரிப்பு பணிக்காக சமுத்திரம், மெய்யூர், காந்திபுரம், தேனிமலை, அண்ணா நகர், சாந்தி மலை, அத்தியந்தல், நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணாநகர், எடப்பாளையம், கீழ்நாத்தூர், வேல்நகர், கோபால்நாய்க்கன் தெரு, கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவலம் ரோடு, ரமணா ஆஸ்ரமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும். ஷேர் பண்ணுங்க
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (29.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மக்கள், அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை கீழ் மாவட்டங்களில் இருக்கும் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், திருவண்ணாமலையில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு<
திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் M.சுதாகர் தலைமையில் இன்று(29.01.2025) பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) சிவனுபாண்டியன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு) R.சௌந்தரராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அக்னிவீர்த் திட்டத்தில் ராணுவத்தில் சேர விண்ணப்பித்த திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்கள், 5.2.2025 முதல் 15.2.2025 வரை காஞ்சிபுரம் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும் ஆள்சேர்ப்பு திரளணியில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் கேட்டுக்கொண்டார். ஆவண விவரங்கள் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.