India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.மலை மாவட்டம் தேவிகாபுரம் பகுதியில் பிரசித்திபெற்ற கனககிரீசுவரர் கோவில் உள்ளது. மலை மீது உள்ள இந்த கோவிலில் ஒரே கருவறையில் 2 சிவ லிங்கங்கள் உள்ளது. வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, மனத்துயரம் நீங்க பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறினால், மொட்டை அடித்தல், பொங்கல் வைத்தல் போன்ற நேர்த்தி கடன்களை செய்கின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
தமிழ்நாடு பொது சுகாதார துறையில் 126 பணியிடங்கள் சென்னையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 8th, B.Sc, DMLT, M.Sc போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ.8,500- 21,000 சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் இங்கே <
திருவண்ணாமலை மாவட்டம், தேசூரை அருகே பாஞ்சரை கிராமத்தில், இருளர் சமூகத்தைச் சேர்ந்த காசி என்பவர் உயிரிழந்தார். இதனை அடுத்து அவரின் உடலை புதைக்க இல்லாததால் 50 பேர் தர்ணாவில் ஈடுபட்டனர். வந்தவாசி காவல்துறையினரும் வருவாய் துறையினரும் பேச்சு வார்த்தை நடத்தி, மயானத்திற்கு இடம் ஒதுக்குவதாக உறுதி அளித்தனர். பின்னர், அவர்கள் ஊரில் இருந்து 3 கி.மீ தூரத்தில் உடலை புதைக்க அவர் குடும்பத்தினர் சம்மதித்தனர்.
தி.மலை மாவட்டம் தூசி அருகில் திருக்குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. வாலி குரங்கு வடிவிலும், இந்திரன் அணில் வடிவிலும் எமன் முட்டம் (காகம்) வடிவிலும் வழிபட்ட தலம் இது. பாவ விமோசனம், ஞானம், அறிவு திறன் பெற, சனிதோஷம் நீங்க இங்கு வழிபடுகின்றனர். கர்ப்பிணி பெண்கள் இங்கு வழிபட்டால் சுகப்பிரசவம் ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
உலகம் முழுவதும் இன்று (08-03-2025) மகளிர் தின விழாவை கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை சார்பில் மகளிர் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
தி.மலை மாவட்ட மக்கள் சவுதி அரேபியாவில் டெலிகாம் புராஜெக்ட்டில் பணிபுரிய வாய்ப்பு. இளநிலை, டிப்ளமோ, டெலிகாம் பயின்றவர்களுக்கு இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு 25- 44 வயதுடையவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-22502267, வாட்ஸ் அப்: 9566239685 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 25/03/25. யூஸ் பண்ணிக்கோங்க மறக்காம ஷேர் பண்ணுங்க.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் ரக்ஷ்ன் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு உறுதியான காரணம் இல்லை. 30 வயதைக் கடந்த பெண்களுக்கு எவ்வாறு மாா்கப் புற்றுநோய் பரிசோதனை அவசியமோ, அதுபோலவே 20 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒருமுறையாவது பெண்கள் இதய நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மகளிா் தினத்தில் இதய நலம் காப்பதற்கான உறுதிமொழியை அனைத்துப் பெண்களும் மேற்கொண்டால் ஆரோக்கியமான சமூகம் அமையப்பெறும். ஷேர் செய்யுங்கள்
மினோகா, இனோகா என்ற 2 வேறு வகையான மாரடைப்பு பாதிப்பு இளம்பெண்களிடம் தற்போது அதிகரித்து வருகிறது. சா்க்கரை நோய், தவறான உணவுப் பழக்கம், உயா் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, மரபணு பாதிப்பு, மன அழுத்தம் ஆகியவைதான் முக்கிய காரணம். இதயத்துக்குச் செல்லும் குறுநாளங்களில் அடைப்பு ஏதும் இன்றி ரத்த ஓட்டம் தடைபடும். மிகவும் சிக்கலான இந்த நோய்களுக்கு 18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா்.
மாதவிடாய் பருவம் எட்டிய பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜின் என்ற ஹாா்மோன் அதிக அளவில் சுரக்கும். ஈஸ்ட்ரோஜின் அதிகமாக சுரக்கும் பருவத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மாரடைப்பும், இதய நோய்களும் பரவலாக ஏற்படுகிறது. குறிப்பாக, இதய தசை செயலிழப்பு (காா்டியோ மையோபதி) அதிகரித்துள்ளது. அதிலும் 20 – 35 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் பலா் அத்தகைய நோய்க்குள்ளாகி வருவதாக ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.