India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் செய்யாற்றில், ஆற்றுத் திருவிழா வரும் 4ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் சமேத உண்ணாமலை அம்மன், கலசப்பாக்கம் தீருமா மூடிஸ்வரர் சமேத திரிபூர சுந்தரி சுவாமிகள் செய்யாற்றில் எழுந்தருளி தீர்த்தவாரி திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில், சுமார் 20க்கும் மேற்ப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கலந்து கொள்வார்கள்.
ஆரணி அடுத்த களம்பூர் ஏரியில் அடையாளம் தெரியாத நபர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளார். பொதுமக்கள் உடலை கரைக்கு கொண்டு சென்று அவரை ஆரணி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இது குறித்து களம்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவரை அடையாளம் கண்டறிந்தவர்கள் களம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் செய்யுங்கள்.
சேத்துப்பட்டு பேரூராட்சி அண்ணா தெருவைச் சேர்ந்த குணசேகரன், தனியார் பள்ளி பேருந்தில் கிளீனராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று (ஜன.31) ஒருந்து படிக்கட்டில் நின்றிருந்தபோது, நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சேத்துப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்தபோது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பைனான்ஸ் தொழிலுக்கு இடையூறாக இருந்ததால் இ-சேவை மைய வாலிபரை கொலை செய்ததாக கைதான பைனான்சியர் வாக்குமூலம் அளித்துள்ளார். கீழ்பென்னாத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (33) இ-சேவை மையம் நடத்தி வந்தார். இவர் கடந்த 28ஆம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (31.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உள்ளூர் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சட்டப்படி, குழந்தை திருமணம் என்பது 18 வயதுக்குட்பட்ட பெண் (அ) 21 வயதுக்குட்பட்ட ஆண் திருமணம் ஆகும். பெரும்பாலான குழந்தை திருமணங்கள் இளம் பெண்களிடையே நடைபெறுகின்றன. எனவே குழந்தை திருமணத்தை நடத்தி வைப்போர், திருமணத்தை புகைப்படம் எடுப்போர் மற்றும் திருமணத்தில் சீரியல் செட் போடும் நபர் என திருமணத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தக்க தண்டனைகள் வழங்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக தர்பகராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் திருப்பத்தூர் ஆட்சியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் பிப். 5-ஆம் தேதி நடைபெறும் தமிழ் எழுத்தாளா்கள், தமிழறிஞா்களை நினைவுகூரும் பேச்சுப் போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர் மற்றும் ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். பிப்.3ஆம் தேதிக்கு மேல் விண்ணப்பிக்கலாம். <
ரெண்டேரிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பிரதீப்குமாா் (32), சென்னை சைதாப்பேட்டையில் ஊர்காவல் படைப் பிரிவில் காவலராக பணியாற்றி வந்தாா். காந்தியடிகள் நினைவுதினம் நிகழ்ச்சி முடிந்து நேற்று சென்னைக்கு போளூரில் இருந்து பைக்கில் சென்று கொண்டிருந்தாா். மொடையூா் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் ஒன்று பைக் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். போளூா் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.