Tiruvannamalai

News April 26, 2025

தலைகுப்புற கவிழ்ந்த மினி லாரி; குளத்தில் சிதறிய தக்காளி 

image

திருவண்ணாமலை ஏந்தல் பைபாஸ் சாலை வழியாக நேற்று தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. ஏந்தல் பைபாஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் சென்ற போது அந்த லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் லாரியில் சிக்கி படுகாயம் அடைந்தார். மேலும், அருகில் உள்ள குளத்தில் தக்காளி அனைத்தும் சிதறி மிதந்தன.

News April 26, 2025

இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

image

தி.மலை அண்ணாமலையார் திருக்கோவில் நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம், கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.

News April 26, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (25.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உள்ளூர் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 25, 2025

அம்மையை இறக்கும் படவேடு அம்மன்

image

தி.மலை மாவட்டம் படவேடு பகுத்தியில் பிரசித்திபெற்ற ரேணுகாம்பாள் கோயில் உள்ளது. இங்கு வந்து அம்மனை வழிபட்டால் முப்பது முக்கோடி தேவர்களை தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் 3-5 நாட்கள் கோயிலில் தங்கி வழிபட்டால் அம்மை உடலை விட்டு இறங்கும் என்று பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது. மேலும், கண் நோய், கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர். ஷேர் பண்ணுங்க.

News April 25, 2025

ALERT: ரசாயன முறையில் பழுக்கவைக்கப்படும் மாம்பழம் 

image

திருவண்ணாமலை மாநகராட்சியில் இன்று(ஏப்.25) இரண்டு மாம்பழ கடைகளில் ரசாயனங்களை கொண்டு தவறான முறையில் பழுக்க வைக்கப்பட்ட சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான 1.5 டன் மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதனை பாதுகாப்பான முறையில் அகற்ற மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ராமக்கிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். மாம்பழம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் தரமானதை வாங்குங்கள். ஷேர் பண்ணுங்க.

News April 25, 2025

திருவண்ணாமலை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

image

திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவமனைகளின் எண்கள்
⏩ஆரணி: 04173-226052,
⏩செங்கம்: 04188-222399,
⏩செய்யார்: 04182-222219,
⏩வந்தவாசி: 04183-225041,
⏩போளூர்: 04181-223048,
⏩தானிப்பாடி: 04188-247110.
நண்பர்களுக்கு ஷேர் பண்ணி இந்த எண்கள் சேவ் பண்ண சொல்லுங்க

News April 25, 2025

வந்தவாசி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

image

வந்தவாசி அருகே தெய்யார் கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி சத்யநாராயணன் (38). இவரது திருமணத்தின்போது மனைவி புனிதாவுக்கு அளித்த 5 பவுன் நகையை சத்யநாராயணன் அடகு வைத்துள்ளார். அதனை மீட்டு தருமாறு புனிதா கூறியுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த சத்யநாராயணன் வீட்டில் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 25, 2025

வந்தவாசி அருகே பெயிண்டர் மீது லாரி மோதி பலி

image

வந்தவாசி அடுத்த போஸ்கோபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன்(35). சென்னையில் பெயிண்டர் வேலை செய்து வந்தார். கடந்த வாரம் கிராமத்திற்கு வந்த இவர், நேற்று வந்தவாசி-மேல்மருவத்தூர் நெடுஞ்சாலை மருதாடு புறவழிச்சாலையில் சென்றபோது லாரி ஒன்று இவரது பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 24, 2025

தி.மலை: இரவு ரோந்து பணி காவலர்கள் எண்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்-24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 24, 2025

திருவண்ணாமலை: கணவன் நீண்ட ஆயுள் பெறணுமா?

image

திருவண்ணாமாலை, சந்தவாசலில் கோவில் கொண்டிருக்கிறாள் அருள்மிகு கங்கையம்மன். இங்கு, கங்காதேவி இடது காலை மடித்து, வலக்காலை தொங்கவிட்டப்படி, 5 தலை நாகத்தின் கீழ் அமர்ந்திருக்கிறாள். பல நன்மைகள் தரும் இந்த அம்மனுக்கு பெண்கள் தாலி அணிவித்தால் போதும் அப்பெண்ணின் கணவர் நீண்ட ஆயுளுடன் நலமாக இருப்பார் என்பது பக்தர்களின் ஆணித்தரமான நம்பிக்கை. *உங்கள் மனைவியருக்கும் பகிர்ந்து தெரியப்டுத்துங்கள்*

error: Content is protected !!