Tiruvannamalai

News February 18, 2025

இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம் 

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (18.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 18, 2025

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைவர் தகவல்

image

தி.மலை மாவட்டத்தில் 1,061 கிராமங்களில் 4.18 லட்சம் விவசாயிகளுக்கு நில உடமை பட்டா சரி பார்க்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆதார் அட்டை, நிலப்பட்டா மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் ஆகியவற்றை கொண்டு சென்று சிறப்பு முகாமில் பதிவு செய்து பயன்பெறலாம். இந்த மாத இறுதிக்குள் அடையாள எண் மற்றும் அட்டைகள் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தலைவர்  தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

News February 18, 2025

சிப்காட்டுக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்த  ராமதாசு

image

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் உழவர்களை திமுக நிர்வாகிகளைக் கொண்டு தாக்குவது, மிரட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஆளும்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். உயிராக மதிக்கும் நிலங்களை தர மறுக்கும் உழவர்களின் உணர்வுகளை மதிக்காமல் அவர்களை மிரட்டி நிலங்களைப் பறிக்க அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாசு கண்டனம் தெரிவித்துள்ளார். 

News February 18, 2025

தி.மலை அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தின் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று(பிப்.18) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதன்படி திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பா. கணேசன், திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளராக வரகூர் அருணாச்சலம், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக துரை.செந்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News February 18, 2025

இன்ஸ்டா மூலம் பழகி சிறுமியை கர்ப்பமாகிய டிரைவர் 

image

செய்யாறு தாலுகா புதுக்கோட்டை கிராமத்தில் சத்தியமூர்த்தி(22) என்பவன் லாரி ஓட்டி வந்துள்ளான். அவன் இன்ஸ்டா மூலம் 13 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளான். திடீரென சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே பதறி போன பெற்றோர் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. ஆசை வார்த்தை கூறி சிறுமியை சீரழித்த  சத்தியமூர்த்தியை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். 

News February 18, 2025

பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு

image

மதுரவாயல், ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 22தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வரலாறு, இந்தி, அறிவியல் என 10,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். தொடர்புக்கு – 8248470862, 9442568675, 8015343462. இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.

News February 18, 2025

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

image

புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (22), லாரி டிரைவர். இவர் 13 வயதுடைய பள்ளி மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். பின்னர் மாணவியிடம் காதலிப்பதாக பேசி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மருத்துவ பரிசோதனையில், மாணவி கர்ப்பமாக உள்ளது தெரியவந்தது. மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

News February 17, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (17.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 17, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதம் தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடை பெறுவது வழக்கம். அதன் அடிப்படையிலே இன்று திங்கள்கிழமை முன்னிட்டு மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. அதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் கலந்து கொண்டு மனுக்களை பெற்றார்.

News February 17, 2025

13,600 நபர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி காயம் அடைந்த 13,600 நபர்களுக்கு 7.66 கோடியில் ‘இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48’ திட்டத்தின் கீழ் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்ற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும், சிகிச்சை முடிந்தும் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஷேர் பண்ணுங்க. 

error: Content is protected !!