Tiruvannamalai

News April 4, 2025

1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வாரிசுதாரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 10% ஒதுக்கீடு உள்ளது. ஷேர் செய்யுங்கள்

News April 4, 2025

இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ட்விஸ்ட் 

image

செய்யாறு கண்ணியம் நகரைச் சேர்ந்த ஜெமினி(22) மார்ச் 28 அன்று கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டார். இந்த சம்பவத்தில், சுனிலை போலீசார் கைது செய்து விசாரித்தனர். ஜெமினியுடன் முன்விரோதம் காரணமாக திலீப்குமார் உள்ளிட்டோர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. சமூக வலைதளங்களில் வெளியான போதை ஊசி தகராறு செய்தி தவறானது என்று மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர். 

News April 4, 2025

திருவண்ணாமலை கோவிலில் எஸ்.வி.சேகர் தரிசனம்

image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று சாமி தரிசனம் செய்து, விநாயகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் சன்னதிகளில் வழிபாடு செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பு வழங்கப்பட்டது. பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக அரசின் செயல்பாடுகளை பாராட்டி, 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என சூளுரைத்தார். 

News April 3, 2025

ஸ்ட்ரெஸ்ஸில் உள்ளீர்களா இங்கே செல்லுங்கள்

image

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர், திருவண்ணாமலை வல்லாள கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்பொழுது முருகப்பெருமான் (கம்பத்தில்) தூணில் காட்சியளித்து காப்பாற்றினார். ‘முத்தைத் திரு பத்தித் திருநகை’ எனத் தொடங்கும் பாடலை அருணகிரிநாதர் அப்போது பாடினார். எனவே மன அமைதி இல்லாதவர்கள் கம்பத்து இளையனாரை வழிபட்டால் மன அமைதி கிடைக்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க.

News April 3, 2025

திருவண்ணாமலையில் வெப்பநிலை அதிகரிக்கும்

image

தி.மலை மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவ கூடும். இந்நிலையில், வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்கவும், வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளவும், நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். *பாதுகாப்பா இருங்க மக்களே. நண்பர்களையும் எச்சரியுங்கள்*

News April 3, 2025

ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

image

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். <>ஷேர் செய்யுங்கள்<<>>

News April 3, 2025

பெயர் பலகைகளில் தமிழ் கட்டாயம்

image

திருவண்ணாமலையில் அனைத்து கடைகள், ஓட்டல்கள் மற்றும் வணிகவளாகங்களின் பெயர் பலகையில் கட்டாயம் தமிழ் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மொழிகளான ஆங்கிலம் போன்றவை தமிழை விட சிறிய எழுத்துக்களில் பதிவிட வேண்டும் என்றும், இதனை உடனடியாக ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் மாற்ற மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு ஷேர் பண்ணுங்கள்.

News April 3, 2025

திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிகளில் மழை

image

திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், ஒருசில பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. குன்னத்தூர், கமக்குர் பாளையம், காமக்கூர், சம்புவராயநல்லூர், அரியப்பாடி, சேவூர், அக்ராபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது லேசாக பெய்து வரும் இந்த மழை வெப்பத்தை தனித்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?

News April 2, 2025

ஜவுளி பூங்கா அமைக்க ரூ. 2.50 கோடி நிதியுதவி: கலெக்டர் தகவல்

image

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க முன் வரும் தொழில் முனைவோர்களுக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் வரை நிதியுதவி தமிழக அரசால் வழங்கப்படும். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 09.04.2025 அன்று 04.00 மணிக்கு நடைபெறுவதால் தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்புகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News April 2, 2025

குழந்தையாக பிறகும் பாலசுப்பிரமணியர்

image

திருவண்ணாமலை மாவட்டம், மண்மலை என்னும் ஊரில் பிரசித்திபெற்ற பாலசுப்பிரமணியர் கோயில் உள்ளது. இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிக்கு முருகனே குழந்தையாக பிறப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், நோய் நொடி நீங்கி வளமான வாழ்வு பெற பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!