Tiruvannamalai

News February 25, 2025

விபத்து காப்பீட்டு திட்டம் பதிவு சிறப்பு முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் விபத்து காப்பீட்டு திட்டம் பதிவு வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. இந்திய அஞ்சல் துறை மற்றும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி இணைந்து மக்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டத்தை வழங்குகின்றன. 18 முதல் 65 வயதுக்குள் இருக்கும் அனைவரும் ரூ.320-க்கு 5 லட்சம், ரூ.559-க்கு 10 லட்சம், ரூ.799-க்கு 15 லட்சம் வரை காப்பீடு பெறலாம். அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் பதிவு செய்யலாம்.

News February 25, 2025

அறநிலையத்துறை ஊழியரின் கணவர் மர்மச்சாவு

image

ஜெயங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு(41) இவரது மனைவி சுதா தி.மலை இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் கிளார்காக வேலை செய்து வருகிறார். 21ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற பிரபு, மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் அவர், வராஹி அம்மன் கோயில் பின்புறம் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து,போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 25, 2025

திருவண்ணாமலை போஸ்ட் ஆஃப்ஸில் வேலை

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். திருவண்ணாமலையில் மட்டும் 95 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

News February 25, 2025

நாளை இரவு பர்வதமலை ஏற அனுமதி

image

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் பகுதியில், சுமார் 4 ஆயிரத்து 560 அடி உயர பர்வதமலை மீது, உலக பிரசித்தி பெற்ற பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில், மகா சிவராத்திரி தினமான நாளை இரவு மலை ஏற அனுமதிக்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மலையேறும் பக்தர்கள் இரவில் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

News February 24, 2025

கலெக்டர் தர்பகராஜ் அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவில் தலைவர், உறுப்பினர் பதவிக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தர்பகராஜ் அறிவித்துள்ளார். விண்ணப்பம் மார்ச் 7ம் தேதிக்குள் சென்னை முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

News February 24, 2025

CISFல் வேலை- கைநிறைய சம்பளம்!

image

மத்திய தொழில் பாதுகாப்பு படையான CISFல் 1161 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18- 23(1.8.25) வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதளத்தில் 5-03-2025- 3-04-2025க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News February 23, 2025

லாரிகள் நேருக்கு நேர் மோதல் – தீ பிடித்து எரிந்ததில் டிரைவர் பலி 

image

திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் பாய்ச்சல் அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு லாரிகளும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் இதில் ஓட்டுநர் உடல் கருகி பலியானார். 2 பேர் படுகாயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News February 23, 2025

பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம்

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், MyV3 ஆப் பயன்படுத்தி பணத்தை இழந்தவர்கள் திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவலர்களை அணுகி புகார்களை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

News February 23, 2025

திருவண்ணாமலை கோவிலில் காலி பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 109 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.02.2025க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News February 23, 2025

கிணற்றில் விழுந்த பிளஸ்-2 மாணவி பலி

image

திருவண்ணாமலை புதுகார்கானா தெருவை சேர்ந்த +2 மாணவி தர்ஷினி, கடந்த 19-ந் தேதி மாலையில் அவரது தந்தைக்கு போன் பேசுவதற்காக மாடிக்கு சென்ற போது அங்கிருந்து தவறி வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் விழுந்ததார், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!