Tiruvannamalai

News March 29, 2025

இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்.

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (29.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்.அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவலர்களின் கைப்பேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புறத்தில் பாதுகாப்பின்மை ஏற்படுத்தும் நபர்கள் கண்டால் 100 டயல் செய்யவும்.

News March 29, 2025

சனி தோஷம் நீக்கும் எந்திர சனீஸ்வரர்

image

தி.மலை மாவட்டம் ஏரிக்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற எந்திர சனீஸ்வரர் கோவில் உள்ளது. இன்று சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளதால் விஷேஷ பூஜை நடைபெற உள்ளது. இங்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால், சனிப்பெயர்ச்சியால் உண்டாக்கும் தோஷம் நீங்கி, நீண்ட ஆயுளுடன் நோய் நொடி இல்லாமல் வாழலாம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.

News March 29, 2025

மாணவிக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

image

செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரவிநாயகம் 5 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதுடன், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

News March 29, 2025

பள்ளி படிப்பும், கணினி திறனும் இருந்தால் வேலை

image

மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய 209 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News March 29, 2025

வாட்டிவதைக்கும் வெயில்: அச்சத்தில் மக்கள்

image

கோடைகாலம் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயில் 101 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் பதிவாகியுள்ளது. மார்ச் மாதமே முடியாத நிலையில் 101 டிகிரி செல்சியஸ் பதிவானதால் வருகின்ற நாட்கள் இன்னும் அதிகமாக வெப்பம் பதிவாக கூடும் என மக்கள் அச்சமடைந்துள்ளார்.

News March 29, 2025

5ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

image

செங்கம், செ.நாச்சிப்பட்டு அரசு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தரவிநாயகம். இவர் மதுபோதையில் பள்ளிக்கு வந்து 5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கார்த்திகேயன், சுந்தரவிநாயகத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

News March 28, 2025

பர்வதமலை ஏறினால் கிடைக்கும் நன்மை என்ன?

image

தி.மலை மாவட்டத்தில் பர்வதமலை மிக பிரசித்தி பெற்றது. சாமானிய மக்கள் முதல் திரை பிரபலங்கள் வரை இந்த மலை மீது ஏறி இறைவனை வழிபட அவ்வளவு நாட்டம் காட்டுகின்றனர். இதனால் கிடைக்கும் நன்மை என்ன தெரியுமா?. பல தடைகளை கடந்து மேல உள்ள இறைவனை வழிபட்டால் பாவ விமோச்சனம் கிடைக்கும். தொழில் மந்தம், திருமண தடை நீங்க 5,7,9 முறை பக்தர்கள் மலை ஏறுகின்றனர். ஷேர் பண்ணுங்க.

News March 28, 2025

டெக்னீஷியன் பயிற்சி: ரூ.20,000 சம்பளத்தில் வேலை

image

பழங்குடியின இளைஞர்ளுக்கு உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வெல்டிங், ரெப்ரிஜிரேட்டர், ஏர் கண்டிஷனிங், பைக் – கார் சர்வீஸ் ஆகிய டெக்னீஷியன்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் இடம், உணவு வசதியுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை முடித்தல் ரூ.15,000 – ரூ.20,000 சம்பளத்தில் வேலைவாய்ப்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

News March 28, 2025

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த புதுப்பாளையத்தில், எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாண்டியன் (26), பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் பயந்த அச்சிறுமி அவரது பாட்டியிடம் சொல்ல இதையறிந்த பாட்டி செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி, பாண்டியனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News March 28, 2025

தி.மலை மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (27.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!