India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 427 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. இப்பணிக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்திருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <
செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதற்கு வருகிற 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பஙளை திருவண்ணாமலை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தின் tamilvalarchitvm@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் 2025 சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் செல்ல உகுத்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரை மாதம் 28 ஆம் தேதி (11.05.2025) இரவு 08.47 மணி முதல் சித்திரை மாதம் 29ஆம் தேதி (12.05.2025) இரவு 10.43 மணி வரை உகந்த நேரமாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
தி.மலை மாவட்டம் பாணம்பட்டு கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலத்தை பூசிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை தண்ணீர் பிடிக்க வந்த கிராம மக்கள் குடிநீர் தொட்டியில் மலம் பூசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த போலீசார் மலத்தை பூசியது யார் என தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம் அரங்கேறியுள்ளது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
▶ படவேடு ரேணுகாம்பாள் கோயில் ▶ அத்திமலைப்பட்டு செல்லியம்மன் கோயில் ▶ ஆரணி பாப்பாத்தியம்மன் கோயில் ▶ ஈச்சம்பூண்டி கெங்கையம்மன் கோயில் ▶கடலாடி திரௌபதியம்மன் கோயில் ▶ சோழவரம் மாரியம்மன் கோயில் ▶ திருமணி பொன்னியம்மன் கோயில் ▶ தேசூர் ரேணுகாம்பாள் கோயில் ▶ போளூர் மகாகாளியம்மன் கோயில் ▶ மோசவாடி திரௌபதியம்மன் கோயில் ▶ வேட்டவலம் மாரியம்மன் கோயில். நீங்கள் செல்ல விரும்பும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது. அதில், டிஆர்ஓ ராம்பிரதீபன் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 840 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்டதுறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
கலசப்பாக்கத்தை சேர்ந்த முருகனுக்கு(43) மனைவி, 3 மகள்கள் உள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்த கீதாவுக்கு(38) கணவர், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், முருகனுக்கும், கீதாவுக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் திடீரென கடந்த பிப்.08ஆம் தேதி மாயமான நிலையில், நார்த்தாம்பூண்டி பழங்கோயில் ஏரியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி அடுத்த நெசல் சாலையில் நேமிக்குமார்(20) என்ற இளைஞர் பட்டா கத்தியுடன் செல்போனில் ‘ரீல்ஸ்’ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள் ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். ரீலிஸ் மோகத்தில் வெத்து சீன் போட்ட நேமிக்குமார் தற்போது வேலூர் மத்திய சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.
1. தி.மலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
2. வினையை நீக்கும் மலை உருவில் திருவண்ணாமலை உள்ளது.
3. இங்கு தான், முதன் முதலில் லிங்க வழிபாடு தொடங்கியது.
4. கார்த்திகை தீபத்துக்கு நிகராக இதுவரை எந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு நடந்ததில்லை.
5.தி.மலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால், பாவம் நீங்கி பிறவிப் பிணி அகழும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க
▶ தி.மலை மாவட்ட ஆட்சியர்- தர்ப்பகராஜ் (04175-233333)
▶ தி.மலை மாவட்ட எஸ்.பி- சுதாகர் ( 04175-233431)
▶ மாவட்ட வருவாய் அலுவலர்- இராம்பிரதீபன் (04175-233006)
▶ தி.மலை மாவட்ட திட்ட இயக்குனர்- ரா.மணி (04175-233720)
மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகளின் எண்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. அவசியம் உதவும்.
Sorry, no posts matched your criteria.