India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக் குழுக்கள் தேர்வு மார்ச் – 22,23 ஆகிய 2 தினங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது திருவண்ணாமலை மாவட்டத்திற்கான பொறுப்பாளர் தே.அருள், 8667399314 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு பதிவு செய்துக் கொள்ளலாம்.
தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் வரும் மார்ச் 21 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது. 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் கலந்து கொள்வோர்கள் <
செய்யாறு அடுத்த வெம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜீவகன் ஓய்வு பெற்ற போலீஸ். இவரது மகன் வினோத்குமார் (49) காஷ்மீர் பகுதியில் 62வது படைத்தளத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். கடந்த 18ம் தேதி மாலை 3.49 மணியளவில் காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் இவரின் வலது மார்பு அருகே தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது. அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வீரமரணம் அடைந்தார்.
செய்யாறை அடுத்த பூதேரிபுல்லவாக்கத்தை சேர்ந்தவர் கண்ணன் (29). இவர் கவிதா (21) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு 7 மாதத்தில் அபிஷேக் என்ற மகன் உள்ளார்.இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி வீட்டிலிருந்த கவிதா, விஷம் குடித்து மயங்கி உள்ளார். இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின் கவிதா உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (19.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தி.மலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 21.03.2025 வெள்ளிக்கிழமை அன்று திருவண்ணாமலை மாவட்ட தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களை நிரப்ப தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் கிடையாது.நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த <
ஆரணியை அடுத்த காமக்கூர் பாளையத்தை சேர்ந்த தாமோதரன் மகன் ஜெயராமன் (13), தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் அவர்களுடைய கோழிப்பண்ணையில் உள்ள மரத்தில் சேலை கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென சேலை அவரது கழுத்தை இறுக்கியதில் சம்பவ இடத்திலேயே ஜெயராமன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு அருகே உள்ள பெரணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (48) என்ற விவசாயி. இவர், வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (18.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.