India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்-29) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஏப்ரல்.29) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையார் அருளை பெறுகின்றனர். இத்தகைய பிரசித்து பெற்ற கோவிலில் திரை பிரபலங்களும் அரசியல் ஆளுமைகளும் சாமி தரிசனம் செய்ய வருவதுண்டு. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் (ஏப்.29) இன்று பிரபல திரைப்பட இயக்குனர் பாலா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும், ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
திருவண்ணாமலை அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 427 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. இப்பணிக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்திருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <
செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதற்கு வருகிற 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பஙளை திருவண்ணாமலை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தின் tamilvalarchitvm@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் 2025 சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் செல்ல உகுத்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரை மாதம் 28 ஆம் தேதி (11.05.2025) இரவு 08.47 மணி முதல் சித்திரை மாதம் 29ஆம் தேதி (12.05.2025) இரவு 10.43 மணி வரை உகந்த நேரமாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
தி.மலை மாவட்டம் பாணம்பட்டு கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலத்தை பூசிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை தண்ணீர் பிடிக்க வந்த கிராம மக்கள் குடிநீர் தொட்டியில் மலம் பூசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த போலீசார் மலத்தை பூசியது யார் என தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம் அரங்கேறியுள்ளது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
▶ படவேடு ரேணுகாம்பாள் கோயில் ▶ அத்திமலைப்பட்டு செல்லியம்மன் கோயில் ▶ ஆரணி பாப்பாத்தியம்மன் கோயில் ▶ ஈச்சம்பூண்டி கெங்கையம்மன் கோயில் ▶கடலாடி திரௌபதியம்மன் கோயில் ▶ சோழவரம் மாரியம்மன் கோயில் ▶ திருமணி பொன்னியம்மன் கோயில் ▶ தேசூர் ரேணுகாம்பாள் கோயில் ▶ போளூர் மகாகாளியம்மன் கோயில் ▶ மோசவாடி திரௌபதியம்மன் கோயில் ▶ வேட்டவலம் மாரியம்மன் கோயில். நீங்கள் செல்ல விரும்பும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது. அதில், டிஆர்ஓ ராம்பிரதீபன் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 840 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்டதுறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
கலசப்பாக்கத்தை சேர்ந்த முருகனுக்கு(43) மனைவி, 3 மகள்கள் உள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்த கீதாவுக்கு(38) கணவர், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், முருகனுக்கும், கீதாவுக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் திடீரென கடந்த பிப்.08ஆம் தேதி மாயமான நிலையில், நார்த்தாம்பூண்டி பழங்கோயில் ஏரியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.