India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை நகரத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து காவல்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் தொப்பி, கண் கண்ணாடி, மோர் போன்ற பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திருவண்ணாமலை நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் P.ரவிச்சந்திரன் உடனிருந்தார்.
திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் எதிரில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அடுத்த பெருமணம் கிராமத்தில் கூட்டத்திற்கான ஆலோசனை மற்றும் அழைப்பிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு திமுக உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
சேத்துப்பட்டு – ஆரணி நெடுஞ்சாலையில் நேற்று மட்டும் 4 வெவ்வேறு இடங்களில் காலை விபத்துகளில் 5 பேர் பலி. செஞ்சி பெரியகரம் கிராமத்தைச் சேர்ந்த சசிக்குமார், மேல் சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரர் , வெங்கடேசன், மருத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த துளசி, இடையகொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பலராமன் ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
வெம்பாக்கம் அருகே ராந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பால்காரா் பிரபு. இவரது மனைவி தமயந்தி சில தினங்களுக்கு முன்பு வீட்டு வாசலில் போடப்பட்ட கோலத்தின் மீது அதே கிராமத்தைச் சேர்ந்த அபிஷேக் என்பவர் ஓட்டி வந்த சைக்கிளை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரகாசம் அளித்த புகாரின் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரஜினிகாந்த், அவரது மகன்கள் சக்திவேல், அபிஷேகை கைது செய்துள்ளனர்.
போளூர் அருகே களம்பூர் திமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் பேரூராட்சி செயலாளர் வி. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ எதிரொலிமணியன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார். பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி துணைத் தலைவர் அகமதுபாஷா , தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் எம்.அப்துல் லத்தீப் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து காவல்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் தொப்பி, கண் கண்ணாடி போன்ற பொருட்களையும் வெயில் இருந்து தற்காத்துக் கொள்ள நீர் மோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வழங்கினார்.
போளூர் அடுத்த சந்தவாசல் விளக்கங்கள் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்ற முதியவரை அதே பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் சதீஷ் மற்றும் சுதா ஆகியோர் தங்கள் ஊரில் நடைபெற்ற தேர் திருவிழாவிற்கு பங்கு பணம் கேட்டு முதியவர் மூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட முதியவர் மூர்த்திசந்தவாசல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஜெய்சங்கர், சதீஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் அணையில் சேமித்து வைத்திருந்த மழை நீர் மார்ச் 2 முதல் 27-ம் தேதி வரை 25 தினங்களுக்கு பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது. இன்று அணையில் 25 கன அடி நீர் இருப்புடன் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுவதாகப் பொதுப் பணித் துறை நிர்வாகம் பொதுமக்கள் & விவசாயிகளுக்கு அறிவித்தனர்.
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் இருந்து மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட 100% வாக்கு பதிவு விழிப்புணர்வு பேரணியை இன்று (27.03.2024) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் கூடுதல் ஆட்சியர் ரிஷப், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் கலெக்டரும் தலைவரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பாஸ்கர பாண்டியனிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் பாஜக மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், பாமக மாவட்ட செயலாளர்கள் பக்தவச்சலம், இல.பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.