Tiruvannamalai

News March 18, 2024

தி.மலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தி.மலை, ஆரணி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகளில் சந்தேகத்திற்கிடமாக ரூ. 1 லட்சம் மேல் பரிவர்த்தனை மற்றும் ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட பணம் பரிவர்த்தனை செய்தால் வருமான வரித்துறையிடம் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News March 18, 2024

வந்தவாசி அருகே விவசாயி தற்கொலை

image

வந்தவாசி அடுத்த சிங்கப்பள்ளி கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலன் விவசாயி. குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் பாலன் வீட்டில் விஷம் குடித்துவிட்டு மயங்கி நிலையில் கிடந்தார். அவர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலன் இறப்பு குறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News March 18, 2024

திருவண்ணமலையில் மீண்டும் திமுக போட்டி

image

2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, திருவண்ணமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அண்ணாதுரை(திருவண்ணமலை), விஷ்னு பிரசாத்(ஆரணி) ஆகியோர் வெற்றி பெற்று எம்பியாகினர். இந்நிலையில் இந்த தேர்தலில் யார் இந்த தொகுதிகளில் களம் இறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 18, 2024

ஆரணி: பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

image

ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட போளூர் பகுதியில் கடலூர் சித்தூர் தேசிய நெடுஞ்சாலைகளில் போளூர் பறக்கும் படை தேர்தல் அதிகாரிகள் தற்போது தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலையில் செல்லும் கார்கள் மற்றும் வாகனங்களை கண்காணிப்பு கேமரா மூலம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .

News March 18, 2024

திருவண்ணாமலையில் குறைதீர் கூட்டம் ரத்து!

image

திருவண்ணாமலையில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை குறைதீர் கூட்டங்கள் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 18, 2024

அண்ணாமலையார் திருக்கோயிலில் டிடிவி தினகரன் சாமி தரிசனம்

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த அவர், அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தார். அப்போது கோவில் நிர்வாகத்தினர் அவருக்கு பூர்ண கும்பம் மரியாதையுடன் வரவேற்று சாமி தரிசனம் செய்ய வைத்தனர்.

News March 17, 2024

அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து அதிக அளவில் அண்ணாமலையார் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். இதனால் அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

News March 17, 2024

முதல்வருக்கு அமைச்சர் நன்றி

image

திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த ஆணை பிறப்பித்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவருடைய அலுவலகத்தில் பொதுப்பணி துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேற்று நே‌ரி‌ல் சந்தித்து நன்றி தெரிவித்தார்.இ‌தி‌ல் துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் ச‌ட்டம‌ன்ற உறுப்பினர்கள் அம்பேத்குமார், கிரி, சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

News March 16, 2024

வாக்களிப்பதன் அவசியம் குறித்து செல்ஃபி பாயிண்ட்

image

திருவண்ணாமலை தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தெ. பாஸ்கர பாண்டியன்
100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் அருகே செல்ஃபி எடுத்து நின்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கினார்.
உடன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News March 16, 2024

திருவண்ணாமலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள்

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள நிலையில் தி.மலை மாவட்டத்தில் அரசியல் சார்ந்த விளம்பரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான பாஸ்கர பாண்டியன் இன்று தெரிவித்துள்ளார். மாவட்ட முழுவதும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு தேர்தல் பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

error: Content is protected !!