Tiruvannamalai

News March 21, 2024

தி.மலை மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி சார்பில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு இன்று (21.03.2024) 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட சுவரொட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர் பாண்டியன் அவர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News March 21, 2024

ஆரணி தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

2024 மக்களவைத் தேர்தல், ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணி வேந்தன் போட்டியிடவுள்ளார். கடந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸிலிருந்து விஷ்ணுபிரசாத் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை இத்தொகுதியில் திமுக-வே நேரடியாக களம் காண்கிறது. இதில் போட்டியிடும் தரணி வேந்தன், திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி ஆகியவை இதன் சட்டமன்றத் தொகுதிகள்.

News March 21, 2024

மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி பரிசளிப்பு விழா

image

திருவண்ணாமலை SRGDS மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாவட்ட அளவிலான 14 வயதுக்குட்பட்ட இறகு பந்து போட்டி நடைபெற்றது . இதில் தனியார் மற்றும் அரசு பள்ளி சார்ந்த 20 அணிகள் பங்கு பெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடற்கல்வி ஆய்வாளர் சின்னப்பன் சான்று மற்றும் கோப்பை வழங்கி பாராட்டினார். பள்ளியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 21, 2024

2ம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

திருவண்ணாமலை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக கலியபெருமாள் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.

News March 21, 2024

தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி உங்கள் பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 21, 2024

தி.மலையில் தேர்தல்  விழிப்புணர்வு

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் வைக்கப்பட்டுள்ள மின்னனு திரை மூலம் மக்களவை தேர்தலுக்கான முறையான வாக்காளர் தேர்தல் பங்கேற்பு பற்றிய விழிப்புணர்வு விளம்பரத்தினை நேற்று (மார்ச்.20) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்

News March 20, 2024

தேசிய அளவிலான கைப்பந்து போட்டிக்கு மாணவர் தேர்வு

image

மத்திய பிரதேச மாநிலம், விடிஷாவில் நடைபெற உள்ள 45வது ஜீனியர் தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழக அணிக்காக சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரி மாணவர் ஆர். மகேஷ் ஷர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்மாணவரை இன்று கல்லூரியின் தலைவர் பழனி, செயலாளர் விஜய் ஆனந்த், பொருளாளர் ஸ்ரீதர், கல்விப்புல முதன்மையர் உடையப்பன், முதல்வர் ஆனந்தராஜ், உடற்கல்வி இயக்குநர் கோபி உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.

News March 20, 2024

தேர்தல் கட்டுப்பட்டு அறையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பட்டு அறையில், பறக்கும்படை வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கும் பணியினை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் இன்று (20.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

News March 20, 2024

திருவண்ணாமலை அருகே குவிந்த பெண்கள்

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ராஜவீதியில் உள்ள தனியார் கணினி மையத்தில் இன்று காலை முதல் பெண்கள் குவிந்தனர். சுயமாக கைத்தொழில் செய்யும் பெண்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.10,0,000 வரை வட்டி இல்லாத கடன் பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கடன் தொகையை பெறும் பொருட்டு இணையதளத்தில் பதிவு செய்வதற்காக கணினி மையத்தில் பெண்கள் குவிந்துள்ளனர்.

News March 20, 2024

ஆரணி அருகே மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு

image

ஆரணி அருகே இராட்டிணமங்கலம் ஊராட்சிகுட்பட்ட இ.பி.நகரில் உள்ள ஊ.ஒ.தொ.பள்ளியில் இன்று மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில்
ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், வார்டு உறுப்பினர்கள் இபி.நகர் குமார்
ஆசிரியைகள் உமாராணி, சோபனா மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!