Tiruvannamalai

News March 22, 2024

ஆரணி: மாற்றுத்திறனாளி சுயேட்சை வேட்பாளராக மனு தாக்கல்

image

ஆரணி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக காந்தி நகரைச் சேர்ந்த பாபு என்ற மாற்றுத்திறனாளி சுயேட்சை வேட்பாளராக இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆரணி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளிடமும் சென்று வாக்கு சேகரிப்பேன் என அவர் தெரிவித்தார். 

News March 22, 2024

திருவண்ணாமலை: ஒற்றை விரல் புரட்சி செய்வோம்

image

தி.மலை மத்திய பேருந்து நிலையத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் 2024 மக்களவை தேர்தலையொட்டி 100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (22.03.2024) மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தை பேருந்து பயணிகளிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News March 22, 2024

ஆரணி காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்

image

ஆரணி நகர காவல் நிலையத்தில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தேர்தலில் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்தும் இடங்கள் குறித்தும் அவர்களுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, எஸ்ஐ சுந்தரேசன் உடனிருந்தனர்.

News March 22, 2024

திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் அறிவிப்பு

image

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 4ம் கட்ட பட்டியல் சற்றுமுன் வெளியானது. இதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் அஸ்வத்தாமன் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 14 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 22, 2024

திருவண்ணாமலை அருகே தீவீர சோதனை

image

திருவண்ணாமலை, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்ட எல்லை பகுதியான கண்ணமங்கலம் சிசி ரோடு நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை முதல் ஆரணி தேர்தல் பறக்கும் படை அலுவலர் மோகன் தலைமையில் சரவணன் பிரதாப் மற்றும் ராஜேஸ்வரி உள்ளிட்ட பறக்கும் படை அதிகாரிகள், காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரின் பலத்த சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

News March 22, 2024

தேர்தல்: பா.ம.க. வேட்பாளர் அறிவிப்பு

image

ஆரணி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் பா.ம.க வேட்பாளராக கணேஷ்குமார் சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம், புதுவையில் பா.ஜ.க கூட்டணி சார்பில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு பா.ம.க சார்பில் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

News March 22, 2024

81 பேர் மீது வழக்குப் பதிவு

image

தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் செய்யாறு தொகுதியில் திமுக மற்றும் அதிமுக கட்சியினா் தோ்தல் விதிகளை மீறி கூட்டம் கூடி பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தி.மு.க வினர் 41 பேர்.அ.தி.மு.க 40 என மொத்தம் 81 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News March 22, 2024

யானை வாகனத்தில் பெருமாள் பவனி

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவிலில் நேற்று இரவு பங்குனி உத்திர விழாவின் ஆறாம் நாள் யானை வாகனத்தில் ரங்கநாத பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மேலும் வெண்பட்டு உடையில் இராஜ அலங்காரத்தில் அமர்ந்தவாறு மங்கல வாத்தியங்கள் முழங்க திருவீதியுலா வந்தார். பக்தர்கள் தீபாராதனை காட்டி தங்களது வேண்டுதலை வெளிப்படுத்தினர்.

News March 21, 2024

செங்கம் அருகே பக்தர்கள் தரிசனம்

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி கிராமத்தில் உள்ள அருள்மிகு பெரியநாயகி சமேத ஶ்ரீ கறைகண்டீஸ்வரர் திருக்கோவில் பங்குனி உத்திர பெருவிழா 2024 ஏழாம் நாள் உற்சவம் திருத்தேர் திருவிழா விமர்சியாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் மூர்த்திகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

News March 21, 2024

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

செய்யாறு வட்டம், பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரும் இவருடைய நண்பர் ராமு என்பவரும் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பல்லி கிராமம் அருகே எதிரே வந்த வாகனம் மோதியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், ரவி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். ராமு சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!