India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை தெள்ளார் பகுதி அஸ்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம் (55). கூலித் தொழிலாளியான இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் நேற்று (மார்ச்.24) அதிகமான மாத்திரைகளை உண்டு சுருண்டு விழுந்துள்ளார். சேத்பட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தெள்ளார் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கத்தை அடுத்த கிருஷ்ணாபுரத்தை சார்ந்தவர் சந்திரன் மகன் அஜித் குமார் (25). இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது டிராக்டர் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அஜித் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து செங்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஓட்டுநர் கோபி மற்றும் டிராக்டர் உரிமையாளர் பிரகாஷ் ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (24.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தாட்கோ மூலம் பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கான புத்தாக்கப் பொறியாளர் பயிற்சிக்கு www.tahdco.com-ல் பதிவு செய்யலாம் என கலெக்டர் தர்பகராஜ் அறிவித்துள்ளார். 2022–2024 வரை பட்டம் பெற்ற, 21–25 வயதுடைய, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் கீழ் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் இளைஞர்கள் பயனடையலாம். 18 வார பயிற்சிக்கு தங்கும் வசதியுடன் வேலைவாய்ப்பு வாய்ப்பு வழங்கப்படும்.
விழுப்புரம் டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <
மத்திய அரசின் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயர்மேன், ரிஜ்ஜர், ஸ்கபோல்டர் என மொத்தம் 12 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். 18-45 வயதிற்குட்பட்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு வடிவில் தேர்வுகள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (மார் 24) இந்த லிங்க்கை <
களம்பூரை அடுத்த ஏந்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் விவசாயி இவரது மனைவி கல்பனா, கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பதகராறு காரணமாக மனைவி தனது தாய் வீடான வேலூருக்கு சென்று விட்டார். இதனால் சிவக்குமார் மட்டும் விவசாய நிலத்தில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று சிவகுமார் ரத்தகாயங்களோடு உயிரிழந்திருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த களம்பூர் போலிசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிழக்கு தாம்பரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (38), பெயின்டர். இவர், தண்டராம்பட்டு அருகில் உள்ள கீழ்செட்டிபட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர் என்பவரது வீட்டில் பெயிண்ட் அடிக்கும் போது தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தண்டராம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (23.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தி.மலை மாவட்டம் தேவிகாபுரம் பகுதியில் பிரசித்திபெற்ற கனக கிரீஸ்வரர் கோவில் உள்ளது. இது 2000 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. வேலைவாய்ப்பு கிடைக்க, பதவி உயர்வு, திருமணம், குழந்தை பாக்கியம் பெற பக்தர்கள் இங்கு பிராத்தனை செய்கின்றனர். மேலும், இந்த வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். நீங்களும் விசிட் பண்ணுங்க. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.