India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெம்பாக்கம் அருகே ராந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பால்காரா் பிரபு. இவரது மனைவி தமயந்தி சில தினங்களுக்கு முன்பு வீட்டு வாசலில் போடப்பட்ட கோலத்தின் மீது அதே கிராமத்தைச் சேர்ந்த அபிஷேக் என்பவர் ஓட்டி வந்த சைக்கிளை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரகாசம் அளித்த புகாரின் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரஜினிகாந்த், அவரது மகன்கள் சக்திவேல், அபிஷேகை கைது செய்துள்ளனர்.
போளூர் அருகே களம்பூர் திமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் பேரூராட்சி செயலாளர் வி. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ எதிரொலிமணியன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார். பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி துணைத் தலைவர் அகமதுபாஷா , தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் எம்.அப்துல் லத்தீப் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து காவல்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் தொப்பி, கண் கண்ணாடி போன்ற பொருட்களையும் வெயில் இருந்து தற்காத்துக் கொள்ள நீர் மோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வழங்கினார்.
போளூர் அடுத்த சந்தவாசல் விளக்கங்கள் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்ற முதியவரை அதே பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் சதீஷ் மற்றும் சுதா ஆகியோர் தங்கள் ஊரில் நடைபெற்ற தேர் திருவிழாவிற்கு பங்கு பணம் கேட்டு முதியவர் மூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட முதியவர் மூர்த்திசந்தவாசல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஜெய்சங்கர், சதீஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் அணையில் சேமித்து வைத்திருந்த மழை நீர் மார்ச் 2 முதல் 27-ம் தேதி வரை 25 தினங்களுக்கு பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது. இன்று அணையில் 25 கன அடி நீர் இருப்புடன் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுவதாகப் பொதுப் பணித் துறை நிர்வாகம் பொதுமக்கள் & விவசாயிகளுக்கு அறிவித்தனர்.
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் இருந்து மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட 100% வாக்கு பதிவு விழிப்புணர்வு பேரணியை இன்று (27.03.2024) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் கூடுதல் ஆட்சியர் ரிஷப், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் கலெக்டரும் தலைவரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பாஸ்கர பாண்டியனிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் பாஜக மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், பாமக மாவட்ட செயலாளர்கள் பக்தவச்சலம், இல.பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போளூர் ஒன்றிய அதிமுக சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற அதிமுக தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. அதில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். அதில் திரளான அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிபாளையம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை. இவர் அதிமுக பிரமுகரான இவர் நேற்று மாலை கட்சிக்காரர்களுடன் தேர்தல் தொடர்பாக பேசிவிட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பொழுது மாங்காயை மரம் பஸ் ஸ்டாப் அருகே தடுப்பு சுவரில் ஸ்கூட்டர் மோதியதில் படுகாயம் அடைந்தார்.பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று இரவு இறந்துவிட்டார்.
தி.மலையில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு வாக்கு சதவீதம் அதிகரிக்கும் நோக்கில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக நேற்று வேங்கிக்கால் ஊராட்சி ஓம் சக்தி நகரில் உள்ள மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டிற்கு மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று மாற்றுத்திறனாளி நபருக்கு பழ கூடை கொடுத்து 12-D படிவத்தினை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.