Tiruvannamalai

News March 29, 2024

செஞ்சுரி அடித்த வெயில்

image

திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் குடை பிடித்துக் கொண்டும் ஹெல்மெட் அணிந்தும் செல்கின்றனர்.  இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட், 37.7 டிகிரி செல்சியஸ்யாக பதிவாகியுள்ளது.

News March 29, 2024

தி.மலை: களத்தில் இறங்கிய கலெக்டர்

image

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் – ஆரணி செல்லும் சாலையில் மங்களமேடு பகுதியில் 2024 மக்களவை தேர்தலையொட்டி பறக்கும் படையினர் மூலம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வாகன சோதனையில் ஈடுபட்டார். ஆவணங்கள் முறையாக கையாளப்படுகிறதா? என பார்வையிட்ட அவர் பறக்கும் படையினர் சோதனையிடும் முறையை நேரடியாக ஆய்வு செய்து கேட்டறிந்தார்.

News March 29, 2024

போளூர்: பள்ளிக்கு விரைந்த ஆட்சியர்

image

2024 மக்களவை தேர்தலையொட்டி போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று (29.03.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

News March 29, 2024

திருவண்ணாமலையில் போக்குவரத்து மாற்றம்

image

அவலூர்பேட்டை சாலை ரயில்வே கேட் பராமரிப்பு காரணங்களுக்காக இன்று முதல் மார்ச்.30 வரை மூடப்படுகிறது. எனவே திருவண்ணாமலையில் இருந்து
அரசு மருத்துவமனை, அவலூர்பேட்டை, சேத்பட், வந்தவாசி செல்பவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாகவும் அல்லது திண்டிவனம் சாலை வழியாக செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 29, 2024

கல்குவாரியில் சூறையாடிய இரண்டு வாலிபர்கள் கைது

image

செய்யார் வெம்பாக்கம் அருகே உள்ள கரந்தை கிராமத்தில் இயங்கும் கல்குவாரியில் கடந்த 26 ஆம் தேதி கரந்தை கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன், வல்லரசு, யுவராஜ் ஆகியோர் கல்குவாரியில் புகுந்து லாரியின் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை சூறையாடினர்.
நேற்று(மார்ச்.28) அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த தூசி போலீசார் வல்லரசு, யுவராஜ் ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்து தலைமறைவான ஜெகதீசனை தேடி வருகின்றனர்.

News March 29, 2024

சோமாசிப்பாடியில் புனித வியாழன் நிகழ்வு

image

சோமாசிபாடி தூய புதுமைப்பதக்க அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் புனித வாரம் நிகழ்வான புனித வியாழனான நேற்று இயேசுவின் பாதம் கழுவும் சடங்கு அருட்பணி ஜான் பீட்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் இறுதி உணவு நிகழ்வை நினைவு கூறும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

News March 28, 2024

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

image

ஆரணி மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் இன்று முதற்கட்ட பிரச்சாரமாக ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேதாஜிபுரம் ஊராட்சியில் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். உடன் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன், அதிமுக அமைப்பு செயலாளர், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர அதிமுக செயலாளர்கள், பேரூர் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளை அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 28, 2024

போக்குவரத்து காவல்துறையினருக்கு தொப்பி கண்ணாடி

image

திருவண்ணாமலை நகரத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து காவல்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் தொப்பி, கண் கண்ணாடி, மோர் போன்ற பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திருவண்ணாமலை நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் P.ரவிச்சந்திரன் உடனிருந்தார்.

News March 28, 2024

தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

image

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் எதிரில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அடுத்த பெருமணம் கிராமத்தில் கூட்டத்திற்கான ஆலோசனை மற்றும் அழைப்பிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு  திமுக உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

News March 28, 2024

4 வெவ்வேறு சாலை விபத்துகளில் 5 பேர் பலி  

image

சேத்துப்பட்டு – ஆரணி நெடுஞ்சாலையில் நேற்று மட்டும் 4 வெவ்வேறு இடங்களில் காலை விபத்துகளில் 5 பேர் பலி. ‌செஞ்சி பெரியகரம் கிராமத்தைச் சேர்ந்த சசிக்குமார், மேல் சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரர் , வெங்கடேசன், மருத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த துளசி, இடையகொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பலராமன் ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!