India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி களம்பூர் பேரூராட்சியில் வாக்கு சேகரித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் M.S.தரணிவேந்தனின் வாகனத்தை நேற்று(ஏப்.1)தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
தி.மலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம் செங்கம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் உள்ள 854 வாக்குச்சாவடி மையங்களில்1722 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் தெ. பாஸ்கர பாண்டியன் அறிவித்தார்.
தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலர கூட்டரங்கில் 2024 மக்களவை தேர்தலையொட்டி தி.மலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதிகளுக்கு கூடுதலாக மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ரேண்டமைஸேன் செய்யும் பணி இன்று (01.04.24) ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
தி.மலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கினை இன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் & போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்களால் திறக்கப்பட்டு, தி.மலை & ஆரணி பாராளுமன்ற தொகுதிகளுக்கு கூடுதலாக மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணியினை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க திருவண்ணாமலை தொகுதி வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஆரணி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மு. பிரியதர்ஷினி மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
வந்தவாசி அடுத்த பழவேரி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் நேற்று மாலை திண்டிவனம் வந்தவாசி நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த ஆந்திர மாநில அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குமார் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி அடுத்த தெள்ளார் வட்டம் படூர் கிராம உதவியாளர் சேகர் பணி நிறைவு பாராட்டு விழாவில் வட்டாட்சியர் பொன்னுசாமி, ஆ.தி.நலத்துறை வட்டாட்சியர் சத்யன், துணை வட்டாட்சியர் ஆனந்தகுமார், வட்ட உணவு வழங்கல் அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர் ரஞ்சித், கிராம நிர்வாக அலுவலர் பர்கத் நிஷா, இப்ராகிம், கிராம ஊழியர் சங்க தலைவர் ம.அருள்ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிரிக்கெட் வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடி அவர்களுக்கு வாக்காளர் கையேட்டினை வழங்கி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஆரணி அடுத்த கீழ்நகர் கிராமத்தில் ஸ்ரீ திரௌபதியம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நாளை ( ஏப்ரல் 1) முதல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பகவான் மேல்நிலை பள்ளியில் நடைபெறவுள்ளது. இதில், முதன்மை தேர்வர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்கள் என அனைத்து ஆசிரியர்களும் பணி விடுப்பு அளித்து விடைத்தாள் திருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.