Tiruvannamalai

News April 3, 2024

திருவண்ணாமலை: முக்கிய வீதிகளில் முதல்வர்

image

திருவண்ணாமலையில் முக்கிய வீதிகளில் நடந்து சென்று இந்தியா கூட்டணியின் தி.மலை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து பொதுமக்களிடம் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை வாக்கு சேகரித்தார். நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் திமுக மாவட்ட நிர்வாகிகள் பலர் முதல்வருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு போலீஸ் குவிப்பு

News April 3, 2024

தி.மலை:முழுவதும் இன்று ட்ரோன்கள் பறக்க தடை

image

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்று (தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர இருப்பதால் திருவண்ணாமலை முழுவதும் “ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள்” (No Flying Zone) பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

News April 3, 2024

தி.மலை அருகே இருவர் கைது

image

சாத்தனூர் வனச்சரகம் பூ மலை காப்புக்காட்டில் வனச்சரக பணியாளர்கள் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காப்பு காட்டை ஒட்டி கிணற்றில் விழுந்த சிறிய புள்ளி மானை எடுத்து அறுத்து கூறு போட்டு கறியை விற்பனை செய்து கொண்டிருந்த இருவரை கைது செய்தனர். மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி இருவருக்கும் தலா 30 ஆயிரம் வீதம் மொத்தம் 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை செய்து விடுவித்தனர்.

News April 2, 2024

தி.மலை: முதல்வருக்கு சிறப்பு வரவேற்பு

image

திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் நாளை பரப்புரை மேற்கொள்ளவுள்ளார் . இதனையொட்டி இன்று திருவண்ணாமலை வந்த மமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அருணை கல்வி குழுமத்தின் துணை தலைவர், குமரன், கம்பன் ஆகியோர் சிறப்பு வரவேற்பு அளித்தனர். உடன் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

News April 2, 2024

போளூர்: பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு

image

போளூரில் ஆரணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று போளூர் பேருந்து நிலையம் அருகில் பரப்புரை செய்தார். இதில் ஏராளமான தேமுதிக மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

News April 2, 2024

தி.மலை: டயர் வெடித்து விபத்து: 15 பேர்?

image

சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் கிராம வழியாக ராணிப்பேட்டை பகுதியில் இருந்து மேல்மலையனூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பக்தர்களின் வேன் டயர் வெடித்து கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயமடைந்தனர். இது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சேத்துப்பட்டு போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 2, 2024

தி.மலை: ஆசிட் ஊத்தி கொலை

image

வந்தவாசி தாலுகா தையூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார். இவர் வந்தவாசியில் உள்ள வழக்கறிஞரிடம் குமாஸ்தாவாக பணிபுரிந்து வந்தார். நந்தகுமாருக்கும் அவரது சித்தப்பா ஜெயேந்திரன் என்பவருக்கும் சொத்து பிரச்னை  இருந்து வந்தது. இந்நிலையில், ஜெயேந்திரன் மற்றும் அவரது மகன் சதீஷ் கண்ணன் ஆகிய இருவரும் நந்தகுமாரை ஆசிட் ஊத்தி கொலை செய்த வழக்கில் ஆரணி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

News April 2, 2024

முதல் முறை வாக்காளர்களுக்கு பத்திரிகை வழங்கி விழிப்புணர்வு.

image

ஆரணி பேருந்து நிலையத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு முதல்முறை வாக்காளர்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேலதாளம் மற்றும் சீர்வரிசை தட்டுடன் சென்று பேருந்தில் பயணித்த முதல் முறை வாக்காளர்களுக்கு பத்திரிகையை வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர் பாண்டியன் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News April 2, 2024

தி.மலை முதல் சென்னை கடற்கரை வரை நேரடி இரயில் சேவை

image

சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் வரை சென்று கொண்டிருந்த இரயில் இனி திருவண்ணாமலை வரை வந்து செல்லும் என்று திருச்சி பிரிவு தெற்கு இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மாலை 6.00 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் இரயில் இரவு 12.05 க்கு வேலூர், ஆரணி வழியாக திருவண்ணாமலை வந்து சேரும். காலை 3.45 க்கு புறப்பட்டு காலை 9.05 க்கு ஆரணி, வேலூர் வழியாக சென்னை வந்தடையும்.

News April 2, 2024

தி.மலை அருகே மீட்கப்பட்ட ஆண் சடலம்

image

ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் புளியமரம் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலருக்கு அப்பகுதி மக்கள் நேற்று தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!