India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திமுக மாவட்ட துணைச் செயலாளரும்,
செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு.பெ.கிரி தலைமையில், திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் C.N.அண்ணாதுரை, திமுக நிர்வாகிகள் அனைவரையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். இதில் ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, திருவண்ணாமலையில் DR இரா.ரமேஷ் பாபு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தி.மலை பெரியார் நகரில் பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அங்கன்வாடி மையங்களில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் சத்துமாவுடன் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட பாட்டிலினை மாவட்ட தேர்தல் அலுவலர் & மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று வழங்கினார்.
வேங்கிக்கால் ஓம் சக்தி நகரில், 2024 மக்களவை தேர்தலையொட்டி வாக்கு சதவீதம் அதிகரிக்கும் நோக்கில் மாற்றுத்திறனாளி வாக்களிக்க ஏதுவாக அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று 12-னு படிவத்தினை இன்று (23.03.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
செங்கம் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மக்களவை தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
திருவண்ணாமலை, வேங்கிக்கால் பேருந்து நிலையம் அருகே, அன்னை அஞ்சுகம் நகரில் 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்கு சதவீதம் அதிகரிக்கும் நோக்கில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக நேரில் சென்று 12-D படிவத்தினை இன்று (23.03.2024) மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். இதில், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
திருவண்ணாமலை பச்சையம்மன் கோயில் தெருவில் தேர்தல் குறித்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஆட்சியர் கலந்துகொண்டு அப்பணியை தொடங்கி வைத்தார்.
ஆரணி அருகே காமக்கூர் கிராமத்தில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அமிர்தாம்பிகை உடன் சந்திரசேகர சாமி அமர்ந்து காமக்கூர் கிராமத்தில் முக்கிய வீதிகளில் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மலர்களை தூவி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
செய்யாறு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சின்னராசு என்பவர் 10ஆம் வகுப்பு மாணவியை அடிக்கடி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில், மாணவி கர்ப்பமான நிலையில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் செய்யாறு மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சின்னராசுவை தேடி வருகின்றனர். இவர் 2 குழந்தைக்கு தந்தை என்பதும் மாணவிக்கு சித்தப்பா முறை என்பதும் தெரியவந்துள்ளது.
போளூர் நகரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சம்பத்கிரி மலையில் உள்ள சுயம்பு லட்சுமி நரசிம்மர் கோயிலில் இன்று காலை லட்சுமி நரசிம்மர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் 940 படிக்கட்டுகளை ஏறி கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.