India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் அஞ்சல் வாக்குகளை பெறும் முகவர்களுக்கான சிறப்பு பயிற்சி நேற்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் உதவி அலுவலர் தீபச்சித்ரா தலைமையில் வட்டாட்சியர் முருகன், துணை வட்டாட்சியர் மற்றும் அலுவலர்கள்,முகவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கலசப்பாக்கம் வட்டம் தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் செழியன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரியில் தேர்தல் முன்னிட்டு முதல் தலைமுறை வாக்காளர்கள் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் இன்று (04.04.2024) கால்பந்து மற்றும் செட்டில் கார்க் விளையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர.
செங்கம் வட்டத்தைச் சேர்ந்த பேயிலம்பட்டு பகுதியில் பட்டப்பகலில் வீட்டினுள் சென்று நகை, பணத்தை நான்கு பேர் திருட முயன்றனர். இதையடுத்து அவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து தாக்கியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் எண்ணிக்கை மொத்தம் 31,690 பேர் ஆகும். அதில் 3, 884 பேர் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எண்ணிக்கை 35,544 பேர் ஆகும். இதில், தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்தவர்களின் எண்ணிக்கை 3, 699 பேர் ஆகும் என தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், மேலப்பாளையம் 10 ஆவது வார்டு பகுதிகளில் அதிமுக முன்னாள் கவுன்சிலர்கள் அ.வெங்கடேசன் மற்றும் மிலிட்டரி குப்பன் தலைமையில் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து இன்று பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளியில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும் எனவும், ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற திமுக வேட்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை மற்றும் எம்.எஸ்.தரணிவேந்தனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் எ.வ.வேலு நினைவுப் பரிசினை வழங்கினார். இதில், அமைச்சர் மஸ்தான், சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, டாக்டர் எ.வ.வே.கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், ஜோதி, அம்பேத்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற திமுக வேட்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை மற்றும் எம்.எஸ்.தரணிவேந்தனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் எ.வ.வேலு நினைவுப் பரிசினை வழங்கினார். இதில், அமைச்சர் மஸ்தான், சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, டாக்டர் எ.வ.வே.கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், ஜோதி, அம்பேத்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
சோமாசிபாடி பகுதியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவண்ணாமலை, ஆரணி திமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். இதில், ஜூன் 3 கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா, ஜூன் 4 மோடி அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு புதிய இந்தியாவின் விடுதலை தொடக்க விழா நடைபெறும்” என்று தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த சோமசிப்பாடி – காட்டாங்குளம் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை ஆரணி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இதில் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.