Tiruvannamalai

News March 13, 2025

பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு ரயில்

image

பௌர்ணமியை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் செல்ல (TRAIN NO.06130) என்ற எண் கொண்ட ரயில் இன்று (மார்ச் 13) பகல் 12:40 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு 2:15 க்கு சென்றடையும். விழுப்புரத்தில் இருந்து (TRAIN NO.06130) என்ற எண் கொண்ட ரயில் 9:25க்கு புறப்பட்டு விழுப்புரத்திற்கு 11:10 க்கு வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 13, 2025

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளர் உயிரிழப்பு

image

திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கழிகுளத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பரசுராமன் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்து 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் பரசுராமனின் உடலை ஆம்புலன்சில் ஏற்ற மறுத்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

News March 13, 2025

3 சென்ட் இடத்திற்காக மூதாட்டி எரித்து கொலை

image

தி.மலையில் 3 சென்ட் இடத்திற்காக மூதாட்டி ஒருவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீயில் கருகி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விருதாம்பாள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த கொலை சம்பவத்தில் எல்லப்பன், கோபி கிருஷ்ணன், சுப்ரமணி, விவேக் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

News March 12, 2025

தி.மலை மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (12.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 12, 2025

மனத்துயரம் நீக்கும் தேவபுரீசுவரர், வேதநாதர் கோவில்

image

தி.மலை மாவட்டம் செய்யாறு அருகே அருள்மிகு தேவபுரீசுவரர், வேதநாதர் கோவில் உள்ளது. இங்கு வந்து வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். தலத்தில் உள்ள நாகலிங்கத்தை அபிஷேகம் செய்தால் திருமண தடை நீங்கும். இத்தலத்தில் உள்ள பனைமரத்தின் பனம்பழங்களை சாப்பிட்டால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.

News March 12, 2025

Mobile App Developer பணிக்கு இலவச படிப்பு

image

தமிழ்நாடு அரசு Mobile App Developer பணிக்கு இலவச படிப்பை வழங்குகிறது. இந்த படிப்பு மூலம் செயலிகளை உருவாக்குவும், செயல்படுத்தவும் முடியும். 12ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும். 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ரூ.35,000 – ரூ.45,000 வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். GRIT Talents, Gradianty, AIRNODE UK, IBM, Brainhunters MY ஆகிய நிறுவனங்களில் வேலை <>கிடைக்கும்.<<>>

News March 12, 2025

ஜலகண்டேசுவரர் கோயிலில் தேர் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு

image

வந்தவாசி அருகே ஜலகண்டேசுவரர் கோயிலில் மாசி மகம் திருவிழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் மாசி மகம் திருவிழா முடிந்த நிலையில் நேற்று நள்ளிரவில் 2 தேர்களில் 1 தேர் தீ பற்றி எரிந்தது.இதனால் அங்கு கூடிய இருந்த மக்கள் உடனடியாக அருகில் இருந்த தீ அணைப்பினருக்கு தகவல் கொடுக்க அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இச்சம்பம் குறித்து விசாரணை செய்து வருகின்றது.

News March 12, 2025

நர்சிங் மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

image

வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது நர்சிங் மாணவி. இம்மாணவியை கொடநல்லூர் கிராமத்தை சேர்ந்த மதியரசன் ( 20) என்பவர், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்து, மாணவியை கர்ப்பமாக்கி உள்ளார். புகாரின் பேரில் வந்தவாசி அனைத்து மகளிர் போலீசார் நேற்று மதியரசன் கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

News March 12, 2025

பௌர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்கம்

image

திருவண்ணாமலைக்கு பௌர்ணமி கிரிவலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. வரும் 13.3.25 காலை 9:30 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு 11:10 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். பிற்பகல் 12:40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2:15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும் என தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 11, 2025

திருவண்ணாமலை பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள்

image

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் மற்றும் பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து மார்ச் 13ஆம் தேதி 350 சிறப்பு பேருந்துகளும், மார்ச் 14ஆம் தேதி 270 பேருந்துகளும், மார்ச் 15ஆம் தேதி 275 சிறப்பு பேருந்துகளும் இயக்க போக்குவரத்துக் கழகம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!