India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.மலை, ஆரணி மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 166 ,108 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 1,3 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 16 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வரும் 09.04.2024 அன்று காலை ஏழு மணியளவில், அருணை இன்ஜினியரிங் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் ஆதார் அட்டை, பிறப்புச் சான்று, பாஸ்போர்ட் புகைப்படம் இரண்டு கொண்டுவர வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
செங்கத்தில் நேற்று இரவு இந்தியா கூட்டணியின் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தலைமை தாங்கினார். இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.
ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (05.04.2024) திமுக இளைஞரணி சார்பில் C.N அண்ணாதுரை அவர்களுக்கு வாக்கு கேட்டு தேநீர் கடையில் டீ போட்டு கொடுத்து நூதன பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த பிரச்சாரத்தின் போது திமுக இளைஞரணி உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தி.மலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலம் அடுத்த கீரனூர் பகுதியில் உள்ள சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான இசை மற்றும் விளையாட்டு திருவிழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட நடிகர் ரியோ ராஜ் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவில் அறக்கட்டளை தலைவர், துணை தலைவர், பொருளர், இயக்குனர், கல்லூரி முதல்வர் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆரணி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில், 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இன்று இல்லம் தேடி வாக்கு பெறப்பட்டது. கண்ணமங்கலம் பகுதியில் உள்ள வயது முதிர்ந்த வாக்காளர்கள், வாக்குச்சீட்டு முறையில் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வாக்குப்பதிவு பெட்டியில் போட்டனர். பலத்த பாதுகாப்புடன் வாக்கு சீட்டு முறை வாக்குப்பதிவு நடைபெற்றது.
போளூர் அடுத்த களம்பூர் திமுக சார்பாக வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது. மேல் அய்யம்பேட்டையில் முன்னாள் எம்எல்ஏ எதிரொலி மணி தலைமையில் மற்றும் நகர செயலாளர் வி. வெங்கடேசன் மற்றும் பேரூராட்சியின் தலைவர் அஹமத் பாஷா மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் எம் அப்துல் லத்தீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
12-டி படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்த 85 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள், மாற்றுத் திறனாளிகளிடம் வீடு வீடாக சென்று தபால்வாக்கு பெறும் பணி இன்று தொடங்கியது. முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் தங்களது விருப்பமான வேட்பாளர்களுக்கு வாக்குகளை செலுத்தினார்கள். இன்று முதல் 3 நாட்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தபால் வாக்கு சேகரிக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட அளவிலான கையுந்து போட்டி நாளை நாளை(ஏப்.06) காந்திநகர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாண்டியன் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைக்க உள்ளார். இதில் முதல் 4-இடம் பிடிக்கும் அணியினருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தல் ஏப்.19 இல் நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.