India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் தொகுதி அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.எஸ்.அன்பழகன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவரது உடலுக்கு அதிமுக முக்கிய தலைவர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர் எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணமாகி 17 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்காக, பாதயாத்திரை நேர்த்திக்கடன் செலுத்த பிரத்யேக மர வண்டி தயார் செய்து அதில் அமர வைத்து, திருப்பதி செல்கிறார் சே.கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன். ஏழுமலையானிடம் வேண்டி குழந்தைப் பேறு கிடைத்ததால், பிரார்த்தனையை நிறைவேற்ற பாத யாத்திரை செல்வதாக அவர் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் தொகுதி அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.எஸ்.அன்பழகன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவரது உடலுக்கு அதிமுக முக்கிய தலைவர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கீழ்பெண்ணாத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2024 மக்களவை தேர்தலை தபால் வாக்கு செலுத்தும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அரசு அலுவலர்கள் இருந்தனர். மேலும், தபால் வாக்கு சேகரிப்பதில் குளறுபடிகள் ஏதும் இருக்கக் கூடாது என எச்சரித்தார்.
தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்.19 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு வசதியாக வாக்குப்பதிவு நடைபெறும் நாளான வரும் ஏப்.19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பொது விடுமுறை அளிக்கப்படுகிறது என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <
திருவண்ணாமலை நகரம், காந்திநகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து இளைஞர்களிடையே நடைபெற்ற வாலிபால் போட்டியினை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் நேற்று (06.04.2024) தொடங்கி வைத்து இளைஞர்களுடன் வாலிபால் விளையாடினார்.
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக 1125 மெட்ரிக் டன் யூரியா சென்னை மணலியில் இருந்து திருவண்ணாமலைக்கு சரக்கு ரயில் மூலம் நேற்று வந்தது. இதனை விவசாயிகளுக்கு வினியோகம் செய்வதற்காக விற்பனை நிலையங்களுக்கு பிரித்து அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், இன்று குற்றவாளியை திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு ஏப்.19-ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தலில் முன்னாள் படை வீரா்களை சிறப்புக் காவலா்களாக பணியமா்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முன்னாள் படை வீரா்கள் தங்களது பெயரை அசல் படை விலகல் சான்றிதழ், அடையாள அட்டை, வாக்காளா் அடையாள அட்டையுடன் திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.