India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் கடுமையாக காணப்பட்டது. திருவண்ணாமலையை ஏற்கனவே அக்னி ஸ்தனம் என கூறப்படும் நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று 102 டிகிரியாக வெயில் பதிவானது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கொழாவூர் , பெரணம்பாக்கம் , ஆத்துரை உள்ளிட்ட கிராமங்களில் நேற்று அகற்றப்படாமல் இருந்த கட்சிக் கொடிகளை தேர்தல் பறக்கும் படையினர் முனியப்பன் தலைமையிலான குழுவினர் அகற்றினர். இந்நிகழ்வின் போது தலைமை காவலர் மோகனா, காவலர்கள் அனுசுயா பிரசாந்த் ஒளிப்பதிவாளர் சேட்டு மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தி.மலை வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று (09.04.2024) ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர், அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்கள் குடை பிடித்துக் கொண்டும், ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர்.
இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட்; 38.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பாலசுப்ரமணியன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்த நிலையில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சித்ரா பெளர்ணமி விழாவிற்கு 2400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதில் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நாடு முழுவதும் 571 நகரங்களில் நடைபெற உள்ளது. நீட் தேர்வுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க பிப்.9 முதல் மார்ச்.16 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்பிக்க முடியாதவர்களின் நலன் கருதி இன்று மற்றும் நாளை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள திருவண்ணாமலை பாராளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 3 ஆம் கட்ட பயிற்சி வகுப்பு 13 ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஏற்கனவே நடைபெற்ற பயிற்சி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களும் தவறாமல் பயிற்சியில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தி.மலை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களை தேர்தலுக்கு முந்தைய நாளன்று வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பிட ஏதுவாக இரண்டாவது ரேண்டமைசேசன் தி.மலை பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது மேற்பார்வையாளர் மகாவீர் பிரதாப் மீனா அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று (08.04.2024) நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவண்ணாமலையில் இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 101.8 டிகிரி பாரன்ஹீட் 38.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.