India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ரூ.15 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக நேற்று ஒருவரை கைது செய்தனா். அவர் மருதாடு கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (24) என்பதும், அங்கு அவா் பெட்டிக் கடை வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள், காவல், தீயணைப்பு துறை ஆகிய துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள் தேர்தலில் தங்களது பங்களிப்பினை அளிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். தேர்தல் பணிக்கு வர விருப்பமுள்ளவர்கள் தங்களது விருப்ப மனுவினை அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் சமர்ப்பிக்குமாறும் சந்தேகம் இருப்பின் 9600899330 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று எஸ்பி தெரிவித்துள்ளார்.
செங்கத்தில் நேற்று பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து நடிகர் கூல் சுரேஷ் பிரச்சாரம் செய்தார். அப்போது, அப்பொழுது தெருவோர செருப்பு தைக்கும் தொழிலாளியின் கடையில் அமர்ந்து பழைய செருப்பை தைத்துக்கொடுத்து வாக்கு சேகரித்தார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலக புகழ் பெற்ற அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்நிலையில், சித்திரை வசந்த உற்சவம் வரும் 14 ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் ஏப்ரல் 13ஆம் தேதி மாலை 4:30 மணி முதல் ஆறு மணி வரை பந்தக்கால் உற்சவம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தி.மலை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இந்நிலையில், இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 101.6 டிகிரி பாரன்ஹீட், 38.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
செங்கம் அருகே மேல்செங்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் இன்று ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலைக்கு உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 45 கை கடிகாரங்களை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
செங்கம் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வாக்களிப்பதன் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
செங்கம் அடுத்த வளையாம்பட்டு கிராம பணிப்பெண்களிடம் 100 % வாக்களிப்பது குறித்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி பணிப்பெண்களுக்கு மோர் வழங்கினார். இதில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் தீபசித்ரா , வட்டாட்சியர்கள் முருகன், ரேணுகா உள்ளிட்ட பலர் இருந்தனர்.
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாட்களாக தி.மலை சட்டமன்ற தொகுதிக்குரிய மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருவதை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று (10.04.2024) ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற பொதுத் தேர்தலையொட்டி 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர்கள் மூலம் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான பட்டு நூல் கொண்டு தேர்தல் விழிப்புணர்வு வாசகம் நெய்யப்பட்ட புடவையை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (ஏப்.10) வெளியிட்டார்.
Sorry, no posts matched your criteria.