Tiruvannamalai

News April 12, 2024

மான் இறைச்சி விற்ற இருவர் கைது

image

தண்டராம்பட்டு அருகே நாலாள்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ராஜா, பாலசுப்பிரமணியம் ஆகிய இருவரும் காட்டில் மானை வேட்டையாடி இறைச்சியை விற்றதாக தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சாத்தனூர் வனச்சரக அலுவலர் சீனிவாசன் மற்றும் வன அலுவலர்கள் விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

News April 12, 2024

தி.மலையில் ரூ. 4.52 கோடி பறிமுதல்

image

திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி கடந்த 27 நாட்களில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றதாக ரூ. 4.52 கோடி பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதன் அடிப்படையில் ரூ. 82 இலட்சம் விடுவிக்கப்பட்டது.

News April 12, 2024

ஆரணி: தீமிதி திருவிழா

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அடுத்த அரையாளம் கிராமத்தில் தீமிதி திருவிழாவின் முதல் நாள் ஆரம்பம் இன்று (12.04.2024) தொடங்கியது. மேலும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஏராளாமான பக்தர்கள், விழா குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

News April 12, 2024

வாகன சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் புறவழிச்சாலை சந்திப்பில் இன்று காலை 5 மணி அளவில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூர் நந்தி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த மோகன் சாரி என்பவரிடம் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1,17,900 யை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

News April 12, 2024

2 ஆண்டுகளில் ரூ. 650 கோடி

image

திருவண்ணாமலை தொகுதி தி.மு.க வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து தி.மு.க வினர் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தனர். அப்போது பேசிய மு.பெ. கிரி எம்.எல்.ஏ அனைத்து துறைகளின் மூலம் சாலைகள், தடுப்பணைகள், அரசு மருத்துவமனைகள் என ஏராளமான வளர்ச்சிப்பணிகள் சுமார் ரூ.650 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளது. ஆனால் நாங்கள் வெற்றி பெற்றால் சாலை அமைப்போம் என அதிமுக பொய் பிரச்சாரம் செய்கிறது என்றார்.

News April 12, 2024

440 பேருக்கு உணவுப் பொருட்கள்

image

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் ரமலான் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு நேற்று வழங்கப்பட்டன. தமுமுக சாா்பில் ரமலான் பண்டிகையொட்டி செய்யாறு நகர அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரிசி, இறைச்சி, காய்கனிகள், மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 440 பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

News April 11, 2024

தி.மலையில் அதிகபட்ச வெப்பநிலை 101.6 டிகிரி

image

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தி.மலை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இந்நிலையில், இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 101.6 டிகிரி பாரன்ஹீட், 38.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

News April 11, 2024

தண்டாரம்பட்டு: சோகத்தில் மூழ்கிய விவசாயி

image

தண்டராம்பட்டு அடுத்த கீழ்ரவந்தவாடி கிராமத்தில் விவசாயி ஒருவர் தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தார். எதிர்பாராத விதமாக கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எறிந்தது. விவசாய நிலத்திற்கு வந்த விவசாயி  உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். 

News April 11, 2024

தி.மலை: பரோட்டா போட்ட வேட்பாளர்

image

போளூர் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட ஆரணி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், ஓட்டல் கடை ஒன்றில் பரோட்டா போட்டு வாக்குச் சேகரித்தார். அப்பொழுது, திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவர் கம்பன், திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் உடனிருந்தனர்.

News April 11, 2024

ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

image

வந்தவாசி அருகே உள்ள அம்மையப்பட்டு கிராமத்தில் ஈத்கா மைதானத்தில் ஏராளமான இசுலாமியர்கள் ஒன்று கூடி இன்று ரம்ஜான் திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகையை மேற்கொண்டனர். இந்த சிறப்பு தொழுகைக்கு பிறகு அனைவரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். மேலும் வந்தவாசி பகுதியின் பல்வேறு இடங்களில் தொழுகை நடைபெற்றது

error: Content is protected !!