India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் 2 ஆம் ஆண்டு இயற்கை உணவுத் திருவிழா நாளை (12-05-2024) காலை 9 மணி முதல் 4 மணி வரை கர்மேல் கிண்டர் கார்டன் பள்ளி வளாகம், பெரியார் சிலை அருகில் நடைபெற உள்ளது. உணவு திருவிழாவில் பாரம்பரியம் உணவு, இயற்கை உணவு வகைகள், இயற்கை விளைபொருட்கள், புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது 2 மகள்களான ஷாலினி, ஷோபனா பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று தனது தந்தையிடம் பேசிய பேசியபோது தந்தை கோபமாக திட்டியதால் சகோதரிகள் இருவரும் தற்கொலை செய்துகொண்டனர்.
வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் 10 ஆம் வகுப்பு தனித்தேர்வராக சிறப்பு பயிற்சி பயின்ற நித்யா(42) மற்றும் அவரது மகன் சந்தோஷ் ஆகியோர் அரசுத் தேர்வில் தேர்ச்சி பெற்று நித்யா 287/500 மதிப்பெண்ணும், அவரது மகன் சந்தோஷ் 300/500 மதிப்பெண்களும் பெற்றனர். கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், கண்டவராட்டி ஊ.ந.நிபள்ளி ஆசிரியர் சக்ரவர்த்தி ஆகியோர் அவர்களை பாராட்டினர்.
ஆரணி திமுக சார்பில் அண்ணா சிலை மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகே இன்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தை குறைக்க பொதுமக்களுக்கு ஐஸ்கிரீம் மற்றும் கிரேப் ஜூஸ் வழங்கப்பட்டது. இதில், ஆரணி தொகுதி திமுக பொறுப்பாளர் S.S.அன்பழகன், நகரச் செயலாளர் AC.மணி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (மே.11) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
தி.மலை மாவட்டம், சென்ற மாதம் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்தது.நேற்று தமிழ்நாடு அரசு பள்ளி தேர்வு துறையால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தி.மலை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் 31 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
செங்கம் அடுத்த அந்தனூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 2023-24 ம் ஆண்டுக்கான 10 வகுப்பு பொது தேர்வு எழுதினர். இதில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் பாரதி மற்றும் இருபால் ஆசிரியர்கள் பாரட்டு தெரிவித்தனர். மாணவர்களின் பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை வாழ்த்தி பாராட்டினர்.
திருவண்ணாமலையில் இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 97.52 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக 100 டிகிரிக்கும் மேலே வெயில் அதிகமாக பதிவான நிலையில் 100 டிகிரிக்கு கீழே வெயில் பதிவானதால் பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இன்று அக்ஷய திருதியை தினம் என்பதாலும் வெயில் குறைவாக இருந்ததாலும் நகை கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது, 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பச்சையம்மன் சமேத மன்னார்சாமி கோயில். மிக பழமையான குலதெய்வ வழிபாடு உடைய கோவில். இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பெரிய நுழைவாசலுடன் இக்கோயில் அமைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.