Tiruvannamalai

News April 14, 2024

திருவண்ணாமலை: சீமான் தேர்தல் பிரச்சாரம்

image

திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பாக்கியலட்சுமி ஆதரித்து அவருக்கு ஒதுக்கப்பட்ட மைக் சின்னத்தில் வாக்களிக்க கோரி சேத்பட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில், ஏராளமான கட்சிக்காரர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News April 14, 2024

திருவண்ணாமலை: 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, மின்கம்பத்தில் மோதி, அரசுப் பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். வந்தவாசியை அடுத்த நடுக்குப்பம் – ஏம்பலம் செல்லும் வழியில் இன்று மதியம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த வயலில் தலைகீழாக கவிழந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News April 14, 2024

அண்ணாமலையார் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு

image

தி.மலையில் கிரிவல பாதையில் திருநேர் அண்ணாமலையார் கோவிலில் உள்ள லிங்கத்தின் மீது ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்புத்தாண்டு தினமான சித்திரை மாதம் 1 ஆம் தேதியன்று காலையில் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெறும். அதன்படி இன்று காலை லிங்கத்தின் மீது சூரியஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெற்றது. அதனை காண அதிகாலையில் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

News April 14, 2024

அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் சித்திரை மாத தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து அதிக அளவில் அண்ணாமலையார் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். இதனால் அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

News April 14, 2024

செல்பி பாயிண்டில் சுயப்படம் எடுத்த கலெக்டர்

image

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் பேரூராட்சியில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று (13.04.2024) தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் செல்பி பாயிண்டில் சுயப்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News April 13, 2024

20 ஆண்டு சிறை தண்டனை: அதிரடி உத்தரவு

image

வந்தவாசி அடுத்த பெரிய புறக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த 2020ஆம் வருடம் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் வண்புனர்வு செய்ததால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். மேற்படி வழக்கை விசாரணை செய்து வந்த நீதிபதி பார்த்த சாரதி அவர்கள், செல்வகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

News April 13, 2024

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்கலாம்

image

தி.மலையில் தேர்தல் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்க புகார் எண்களை ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி, மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சீ. மீனாட்சி (9710825341), தொழிலாளர் உதவி ஆய்வாளர் த. சாந்தி (952308664), ஆ. ஆத்திப்பழம் (9442965035) என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News April 13, 2024

அரிசி ஆலைகளில் வருமானவரி துறையினர் சோதனை

image

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே களம்பூரில் சுமார் 150 க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரிசி ஆலைகளில் அரசியல்வாதிகள் பணம், ஆவணங்கள் பதுக்கி உள்ளதாக புகாரின் பேரில் சென்னை வருமானவரி துறை இணை இயக்குநர் தலைமையில் சென்னை மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் இருந்து சுமார் 24 அதிகாரிகள் 6 கார்களில் களம்பூரில் உள்ள அரிசி ஆலைகளில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

News April 13, 2024

நாட்டு துப்பாக்கியுடன் 2 பேர் கைது

image

செங்கம் அருகே உள்ள வீரானந்தல் பகுதியை சேர்ந்த சந்திரசேகர்(44), கோபால்(29) ஆகியோர் நாட்டு துப்பாக்கிகளுடன் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக வாசுதேவன்பட்டு பகுதியில் சுற்றி திரிந்தனர். அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் அவர்களை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்த 2 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்து போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

News April 13, 2024

மாபெரும் இரத்ததான முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா தெள்ளார் ஊராட்சியில் டாக்டர் அம்பேத்கரின் 134 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தெள்ளார் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கரம் கொடுப்போம் அறம் செய்ய சேவை அறக்கட்டளை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் நடைப்பெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர்.

error: Content is protected !!