Tiruvannamalai

News May 18, 2024

ஆர்ய வைசிய இளைஞரணி சார்பில் ரத்ததான முகாம்

image

திருவண்ணாமலை கன்னி கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று ஸ்ரீ வாசவி ஜெயந்தியை முன்னிட்டு திருவண்ணாமலை ஆர்ய வைஸ்ய இளைஞரணி சார்பில் இரத்த தான முகாம் நடைப்பெற்றது. இதில் ஆரிய வயசு இளைஞரணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் 31 பேர் ரத்த தானம் வழங்கினர். இம்முகாமில் ஆரிய வைசிய சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News May 18, 2024

மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் 14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இப்போட்டியில் திருவண்ணாமலை மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு நாளை மே 19ஆம் தேதி எஸ் கே பி பொறியியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதாக, மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சிவக்குமார் மற்றும் இணை செயலாளர் ஸ்ரீ ஹன்ஸ் குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

News May 17, 2024

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கை

image

செங்கம் அடுத்து நாகப்பாடி தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கை தொடங்கியுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்தோர் 3 ஆண்டுகள், 12 ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றோர் 2ஆண்டுகள் பட்டய படிப்பிற்கு நேரடியாகவும், ஆன்லைன் (https://www. tnpoly. in) மூலமும் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.

News May 17, 2024

திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள்

image

திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்கின்றனர். இவர்கள் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்படி வரும் 23 ஆம் தேதி முதல் சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

News May 17, 2024

தி.மலை: மழைக்கு வாய்ப்பு!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் திருவண்ணாமலையில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 17, 2024

தி.மலை கலெக்டர் உத்தரவு

image

தி.மலை மாவட்டத்தில் இயங்கும் வாகன புகை பரிசோதனை மையங்கள் உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அந்தந்த வாகன புகை பரிசோதனை மையத்துக்கான தனிப்பட்ட கைப்பேசியை உரிமையாளரால் பயன்படுத்த வேண்டும். மேலும் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கியுள்ள மென்பொருளை தங்களது கருவியில் பொருத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கரபாண்டியன் அறிவித்துள்ளார்.

News May 17, 2024

தி.மலை: ஜூன் 4ஆம் தேதி கடும் பாதுகாப்பு

image

திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் என்னும் பணி வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று பாதுகாப்பு பணியில் 2- ஏடிஎஸ்பி, டிஎஸ்பி -8, 17- இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 1099 காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட காவல் துறை அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 17, 2024

10 ஆண்டுகளாக நீடிக்கும் அவலம்

image

அந்தனூர் ஊராட்சி சென்ன சமுத்திரம் கூட்ரோடு பெங்களூர் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மேல்பள்ளிபட்டு செல்லும் கிராம சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் குண்டு குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. நாள்தோறும், மாணவர்கள் விவசாயிகள் என ஆயிரக்கணக்கான மக்கள் செல்லும் முக்கியமான இந்த சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. 

News May 16, 2024

சேத்துப்பட்டு அருகே விபத்தில் ஒருவர் பலி 

image

திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் அடுத்த நம்பேடு கிராமத்தைச் சேர்ந்த வேம்புகண்ணு என்பவர் நேற்று மாலை போளூர் சேத்பட் சாலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி மோதி பலத்த காயங்களுடன் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 16, 2024

கலசப்பாக்கம்: வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு

image

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் பகுதியை சேர்ந்தவர் அருண். வழக்கறிஞரான இவர், தனது நிலம் சம்பந்தமாக கலசப்பாக்கம் நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கிய நிலையில், எதிர் தரப்பினரான வெங்கடேசன் என்பவர் நேற்று இரவு வீடு புகுந்து வழக்கறிஞர் அருணை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினார். அருண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கடலாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!