India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம் கடந்த மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தது. இதனை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்ற பின். பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றும் பணி திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று தொடங்கியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க கட்டணமில்லா வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் செல்போன் செயலி கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1950 மற்றும் 1800 4257047 ஆகியவற்றை பயன்படுத்தி வாகன வசதியை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் சே.கூடலூரில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வரிசையில் நின்று வாக்களித்தார். உடன் அருணை பொறியியல் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் எ.வ.குமரன் இருந்தார். இந்தியா கூட்டணியின் வரவு கணக்கு தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்குகிறது. தமிழ்நாடு புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்தார்
தி.மலை மாவட்டம், செங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் வாக்காளர்கள் வாக்களித்த 7 வினாடிகளுக்குள் VVPAT ஸ்கிரீனில் வாக்களித்த சின்னமும் வேட்பாளர் பெயரும் தெரிந்துகொள்ளலாம் . எனவே, செங்கம் வட்டாட்சியர் முருகன் வாக்காளர்களை விழிப்புடன் இருக்க கேட்டுக்கொண்டார்.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர். செங்கம் G.குமார் முன்னிலையில் பாஜக தொழிலாளர் பிரிவு மாவட்டத் செயலாளர் ரமேஷ் இன்று காங்கிரசில் இணைந்தார். இதில், காங்., நகர தலைவர் காந்தி, வட்டாரத் தலைவர்கள், மற்றும் கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டு CS ரமேஷுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் பாஜக நிர்வாகியின் முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் பணியாளர்களை அனுப்பும் பணியினை கீழ்பென்னாத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அலுவலர்களுக்கு பணி ஆணையை வழங்கினார்.
தி.மலை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட தி.மலை சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு தேவையான பொருட்களை அனுப்பும் பணியினை திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். பின், தேர்தலுக்கு தேவையான பொருட்களை ஏற்றி செல்லும் வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள https://electoralsearch.eci.gov.in லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்து கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் அனைவரும் தவறாமல் ஜனநாயகக் கடமையை செய்ய வேண்டும்.
புகழ் பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவத்தின் நேற்று நான்காவது நாள் இரவு திருவிழாவில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனைகள் நடைபெற்று. பின் சுவாமி மீது பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.