India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேத்துப்பட்டு அடுத்த பருத்திப் கிராமத்தில் இன்று அதிகபடியான வைக்கோலை ஏற்றிச்சென்ற டிராக்டரில் மின் கம்பியில் வைக்கோல் உரசி திடீரென தீ பற்றியது. உடனடியாக கிராம பஞ்சாயத்து தலைவர் ப.ரவி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
தி.மலை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டன. இதை தொடர்ந்து, இன்று(ஏப்.20) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி
பிரதிநிதிகள் முன்னிலையில், பொது
மேற்பார்வையாளர் மற்றும் கலெக்டர் தலைமையில் ஒழுங்குமுறை விற்பனை கூட வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள
பாதுகாப்பு இரும்பு வைப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தல் நிறைவடைந்ததை தொடர்ந்து தி.மலை தேர்தலில் பயன்படுத்திய 1,722 வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும், ஆரணி தொகுதியில் பயன்படுத்திய 1,760 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தி.மலை சண்முகா மேல்நிலைப் பள்ளியிலும் பலத்த பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டது. மேலும், இப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று(ஏப்.19) காலை தொடங்கி இரவு 6 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து, தி.மலை மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி வேட்பாளர் திமுகவை சேர்ந்த அண்ணாதுரையை ஆதரித்து பல்வேறு கட்டங்களாக பிரச்சாரம் செய்த திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தேர்தல் பணி குழு பொறுப்பாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் முதல்முறையாக வாக்களிக்க வந்த முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆட்சியருடன் புகைப்படம் எடுத்துகொண்டனர். பின்னர், ஜனநாயக கடமை ஆற்றிய இளம் தலைமுறையினரை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.
செங்கம், பொரசப்பட்டு கிராமம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு மையத்தில் காலை வாக்குப்பதிவு தொடங்கியபோது வாக்கு பதிவு இயந்திரம் பழுதானதால் சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. இதனால், மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும் என்று வாக்கு பதிவு தலைமை அலுவலர் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் வருவாய் கோட்டாச்சியர் இருந்தார்.
சேத்துப்பட்டு அடுத்த மருத்துவாம்பாடி ஆதிதிராவிடர் பகுதியில் சாலை வசதி, சுடுகாட்டு பாதை என அடிப்படை வசதி செய்தி தராததை கண்டித்து நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்து 300க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க செல்லவில்லை.
திருவண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆரணி மக்களவைத் தொகுதியில் அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் 12,855 பேர் தபால் வாக்குகள் அளித்துள்ளனர்.
என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் வந்தவாசி அருகே எரமலூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இன்று தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். ஊர் பொதுமக்கள் பலர் வாக்களித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.