Tiruvannamalai

News March 16, 2025

ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

தி.மலை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது வெளியிடப்பட்டுள்ளது. அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News March 15, 2025

குழந்தை வரம் தரும் புத்திரகாமேட்டீசுவரர்

image

தி.மலை மாவட்டம் ஆரணியில் புத்திரகாமேட்டீசுவரர் கோவில். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்கு வழிபட விரைவில் அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது பகதர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதற்கு 7 திங்கட் கிழமை விரதமிருக்க வேண்டும். விரதம் துவங்கும் நாளன்று மதியம், ஒரு குழந்தைக்கு, நெய் சோறு தானமாக கொடுத்து அதன் பின் சாப்பிட வேண்டும். இதே போன்று 7 நாட்களும் செய்யவேண்டும். ஷேர் பண்ணுங்க.

News March 15, 2025

மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களுக்கு வேலை

image

208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளதால், மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் 208 மருத்துவர்கள் மற்றும் நர்சுகள், 832 மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர். மருத்துவர்களுக்கு மாதம், ரூ.60,000, நர்சுகளுக்கு ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 15, 2025

ஆரணி அருகே மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி பலி 

image

ஆரணியை அடுத்த சங்கீதவாடி கிராமத்தை சேர்ந்த பூமிநாதன் (62), காவலாளி, இவர் நேற்று (மார்ச்.14) ஆரணி-ஆற்காடு சாலையில் சங்கீதவாடி கூட்ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முன்றார்.அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி ,அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீஸ்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

News March 15, 2025

வெறிநாய் கடித்ததில் தொழிலாளி பலி

image

செங்கம் அடுத்த மேல்பென்னாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (32). இவர், பெங்களூரில் கூலி வேலை செய்து வந்த நிலையில்,விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். அவரை வெறிநாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து,அவா் அரசு ஆரம்ப சுகாதார நிலைத்தில் முதலுதவி பெற்றுவிட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சதீஷ் நேற்று (மார்ச்.14) உயிரிழந்தாா்.

News March 14, 2025

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்வு நாள் கூட்டம்.

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இஆப., அவர்கள் தலைமையில் இன்று (14.03.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.இதில் அரசு அலுவலர்கள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டனர்.

News March 14, 2025

தீவை விலைக்கு வாங்கிய நித்தியானந்தர்

image

சர்ச்சைக்கு பெயர் போன நித்தியானந்தர் 1978ம் ஆண்டு ஜனவரி 1ம் நாள் திருவண்ணாமலையில் பிறந்தார்.தனது பன்னிரண்டாம் வயதில் ‘உடல் தாண்டி அனுபவம்’ எனும் பேரானந்த நிலையினை முதல் ஆன்மீக அனுபவமாக அடைந்தார்.இது அனைத்து மனிதர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்பதற்காக தியானபீடம் என்ற சேவை நிறுவனத்தினை தொடங்கினர். இந்நிறுவனம் 800 கிளைகளுடன் 21 நாடுகளில் செயல்படுகிறது.தனி தீவில் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளார்.

News March 14, 2025

11 மாத குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை

image

சேத்துப்பட்டு அருகே கெங்காபுரம் கிராமத்தை சேர்ந்த கிருபானந்தன் – மாலா தம்பதியின் 11 மாத குழந்தை வேதா ஸ்ரீ கடந்த 28ம் தேதி சுயநினைவு இழந்து உயிரிழந்தது. மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், பாலின விகிதம் குறைவு காரணமாக மருத்துவர் அருண்குமார் புகாரில் தெரிவித்ததால், போலீசார் உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர். அறிக்கை பின் தகவல் தெரிவிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

News March 13, 2025

ஊராட்சி மன்ற அலுவலகத்தை நொறுக்கிய இளைஞர் கைது

image

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இன்று மதியம் அரிவாளுடன் நுழைந்த மணிகண்டன் என்ற இளைஞர் அலுவலகத்தில் கண்ணாடி கதவு, ஜன்னல்களை அடித்து நொறுக்கினார். இதுகுறித்து ஆரணி நகர காவல் நிலையத்தினர் உடனடியாக விரைந்து வந்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 13, 2025

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை

image

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 தணிக்கையாளர் (Concurrent Auditor) வேலைவாய்ப்பு உள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 1 வருடத்திற்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள். அதிகபடியாக 3 ஆண்டுகள் வரை விரிவாக்கம் செய்யப்படும். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். 15ஆம் <>தேதிக்குள் <<>>விண்ணப்பியுங்கள்.

error: Content is protected !!