India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.மலை மாவட்டத்தில் பர்வதமலை மிக பிரசித்தி பெற்றது. சாமானிய மக்கள் முதல் திரை பிரபலங்கள் வரை இந்த மலை மீது ஏறி இறைவனை வழிபட அவ்வளவு நாட்டம் காட்டுகின்றனர். இதனால் கிடைக்கும் நன்மை என்ன தெரியுமா?. பல தடைகளை கடந்து மேல உள்ள இறைவனை வழிபட்டால் பாவ விமோச்சனம் கிடைக்கும். தொழில் மந்தம், திருமண தடை நீங்க 5,7,9 முறை பக்தர்கள் மலை ஏறுகின்றனர். ஷேர் பண்ணுங்க.
பழங்குடியின இளைஞர்ளுக்கு உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வெல்டிங், ரெப்ரிஜிரேட்டர், ஏர் கண்டிஷனிங், பைக் – கார் சர்வீஸ் ஆகிய டெக்னீஷியன்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் இடம், உணவு வசதியுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை முடித்தல் ரூ.15,000 – ரூ.20,000 சம்பளத்தில் வேலைவாய்ப்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த புதுப்பாளையத்தில், எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாண்டியன் (26), பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் பயந்த அச்சிறுமி அவரது பாட்டியிடம் சொல்ல இதையறிந்த பாட்டி செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி, பாண்டியனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (27.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தி.மலையில் திரிசிக்க வேண்டிய 5 முக்கிய கோவில்களை காணலாம்:
1.அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்
2.அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், தி.மலை
3.அருள்மிகு பாண்டுரங்கன் கோயில், தென்னாங்கூர்
4.அருள்மிகு யோகராமர் திருக்கோயில், படவேடு
5.அருள்மிகு கைலாசநாதர் கோயில், நார்த்தம்பூண்டி. உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.
வேட்டவலம் அடுத்த ஆவூரில் நேற்று நள்ளிரவு அடகுகடையில் கொள்ளை சம்பவத்தை தடுக்க முயன்ற போது போலீசார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் அவருக்கு மண்டையில் காயம் ஏற்பட்டும் திருட்டை தடுத்து நிறுத்தினார். இந்நிலையில், சிறப்பாக பணியாற்றிய அவருக்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார். நாமும் இவரை பாராட்டுவோமே. ஷேர் பண்ணுங்க.
இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் இந்த லிங்கை <
தி.மலை அருள்மிகு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெளி மாநில மற்றும் மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து கிரிவலம் செல்கின்றனர். இந்நிலையில், இன்று (மார்ச். 27) காலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற கோ பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்தார்.
கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியில் நாகநதி ரெயில்வே பாலத்தின் அருகே தண்டவாளம் வழியாக நேற்று காலை ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காட்பாடியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற விரைவு ரெயிலில் அவர் அடிபட்டு இறந்தார்.மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தி.மலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவர்கள் www.sdat.tn.gov.in இணையதளத்தில் ஏப்ரல் 6 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மாநில அளவிலான தேர்வுகள் ஏப்ரல் 8 காலை 7 மணிக்கு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.