Tiruvannamalai

News March 31, 2025

பாதுகாப்பு படையில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

image

இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.<> ஷேர் <<>>பண்ணுங்க

News March 31, 2025

ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News March 31, 2025

நிலத் தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு

image

ஆரணி அருகே மெய்யூர் கிராமத்தில் நிலத்தகராறில் சேகர்(55), வசந்தம்மாள்(45), குமரேசன்(30), லோகேஷ் (25) உள்ளிட்டவர்களை அதே பகுதியை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து அரிவாளால் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த 4 பேரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News March 31, 2025

இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (30.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்.அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம்.…என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் கைபேசி எண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டார பகுதியில் பாதுகாப்பின்மை ஏற்படுத்தும் நபர்களை கண்டால் 100 டயல் செய்யவும்.

News March 30, 2025

தி.மலையில் உதயமாகும் 2 புதிய நகராட்சிகள்

image

தமிழ்நாட்டில் புதிதாக 7 நகராட்சிகளை உருவாக்கி தமிழக அரசு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. போளூர், செங்கம், கன்னியாகுமரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி ஆகிய 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. தி.மலை மாவட்டத்தில் 2 புதிய நகராட்சிகள் உதயமாவதை பற்றி உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க. மறக்காம தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 30, 2025

டிப்ளமோ முடித்தால் போதும் மத்திய அரசு வேலை!

image

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 391 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ முடித்திருந்தால் போதும். இதற்கு 18- 30 வயதுடையவர்கள் ஏப்ரல்- 1ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.39,015 முதல் ரூ.68,697 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News March 30, 2025

நீட் தேர்வு பயத்தினால் மாணவி தற்கொலை

image

திருவண்ணாமலை ,வந்தவாசி அருகே ராயனந்தல் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் – தேவி தம்பதியர், தற்போது குடும்பத்துடன் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் தேவதர்ஷினி நேற்று நீட் தேர்வு பயத்தினால் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவிக்கு பெற்றோருக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடாக கொடுக்க பாமாக அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

News March 30, 2025

யூடியூப் சேனல் தொடங்க தமிழக அரசு பயிற்சி

image

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் ‘சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்’ என்ற 3 நாள் பயிற்சியை நடத்த உள்ளது. வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18+ வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்

News March 30, 2025

தொழிற்சாலையில் திடீர் பயங்கர தீ விபத்து

image

காஞ்சிபுரம் சாலையில் உள்ள அழிஞ்சில் பட்டு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் திடீர் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வெடி சத்தத்துடன் மேலும் தீ பரவிய நிலையில் தகவல் அறிந்த செய்யாறு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

News March 30, 2025

மன வருத்தத்தில் தற்கொலை 

image

வந்தவாசி அருகே கடம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை (58) இவரது மகள் சத்தியவாணிக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் வருத்தத்தில் நேற்று முன்தினம் தூக்கு போட்டுகொண்டார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

error: Content is protected !!