India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் எண்ணிக்கை மொத்தம் 31,690 பேர் ஆகும். அதில் 3, 884 பேர் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எண்ணிக்கை 35,544 பேர் ஆகும். இதில், தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்தவர்களின் எண்ணிக்கை 3, 699 பேர் ஆகும் என தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், மேலப்பாளையம் 10 ஆவது வார்டு பகுதிகளில் அதிமுக முன்னாள் கவுன்சிலர்கள் அ.வெங்கடேசன் மற்றும் மிலிட்டரி குப்பன் தலைமையில் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து இன்று பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளியில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும் எனவும், ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற திமுக வேட்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை மற்றும் எம்.எஸ்.தரணிவேந்தனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் எ.வ.வேலு நினைவுப் பரிசினை வழங்கினார். இதில், அமைச்சர் மஸ்தான், சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, டாக்டர் எ.வ.வே.கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், ஜோதி, அம்பேத்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற திமுக வேட்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை மற்றும் எம்.எஸ்.தரணிவேந்தனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் எ.வ.வேலு நினைவுப் பரிசினை வழங்கினார். இதில், அமைச்சர் மஸ்தான், சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, டாக்டர் எ.வ.வே.கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், ஜோதி, அம்பேத்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
சோமாசிபாடி பகுதியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவண்ணாமலை, ஆரணி திமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். இதில், ஜூன் 3 கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா, ஜூன் 4 மோடி அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு புதிய இந்தியாவின் விடுதலை தொடக்க விழா நடைபெறும்” என்று தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த சோமசிப்பாடி – காட்டாங்குளம் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை ஆரணி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இதில் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.
தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேர்தலை முன்னிட்டு, தி.மலை மாவட்டத்தில் முதல்முறை வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, வாக்களிப்பதன் முக்கியத்துவத்தினை உணர்த்தி தவறாமல் வாக்களிக்க முதல் முறை வாக்காளர்களுக்கு சிறப்பு அழைப்பு மையம் இன்று மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். இதில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில், இன்று இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டார். இதில், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகபட்சமாக 100.04 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியிருக்கிறது. இதன் அளவு டிகிரி செல்சியஸில் 38 டிகிரி செல்சியஸ் ஆகும். சுட்டெரித்த வெயிலின் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிக்குள்ளாகினர். இதனால் மக்கள் வெயிலில் செல்ல தயங்குகின்றனர்.
Sorry, no posts matched your criteria.