Tiruvannamalai

News May 28, 2024

மருந்து சாப்பிட்ட 10 மாடுகள் பலி

image

வந்தவாசி அடுத்த பொன்னூர் மலைப்பகுதியில் காட்டு பன்றிகளை வேட்டையாட வைத்திருந்த வெடிபொருட்களை அந்தப் பகுதியில் மேய்ச்சலுக்கு வந்த பத்திற்கும் மேற்பட்ட மாடுகள் வெடி மருந்துகளை சாப்பிட்டதால் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பலியானது. இதுகுறித்து மாட்டின் உரிமையாளர்கள் பொன்னூர் காவல் நிலையத்திலும் வனத்துறையினரிடமும் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பொன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 28, 2024

அண்ணாமலையாருக்கு1008 கலச அபிஷேகம்

image

தி.மலை அருள்மிகு ஶ்ரீ அண்ணாமலையார் திருக்கோவில் அக்னி தோஷ நிவர்த்தி இன்று (28.05.2024) நான்காம் கால யாக பூஜை நிறைவுபெற்று கடம் புறப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் மூலவருக்கு 1008 கலசாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாக சாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட கலசங்கள் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News May 28, 2024

உலக பட்டினி தினத்தில் அன்னதானம்

image

திருவண்ணாமலையில் உலக பட்டினி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் படி, ஏழை, எளிய மக்களுக்கு மாவட்ட தலைவர் பாரதிதாசன் அன்னதானம் வழங்கினார். இதில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News May 28, 2024

ஆரணி அருகே மேஸ்திரி படுகொலை

image

திருவண்ணாமலை மாவட்டம் அரணி பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் பாஸ்கரன், வெங்கடேசன். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே பாகப்பிரிவினை காரணமக தகராறு இருந்து வந்துள்ளது. போதையில் இருவரும் சண்டையிட்டுக் கொண்டதில் அண்ணன் பாஸ்கரன் தலையில் தம்பி வெங்கடேசன் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். வெங்கடேசனை போலீசார் இன்று கைது செய்தி விசாரணை நடத்தி வருகின்றனர்,

News May 28, 2024

சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரம்

image

திருவண்ணாமலை-விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை கீழ்நாத்தூர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலையை விரிவுபடுத்தும் நோக்கில் சாலையோர புளிய மரங்கள் அகற்றப்பட்டு பக்க கால் வாய்க்கால் அமைக்கப்பட்டன. தற்போது அப்பகுதியில் சாலையை அகலப்படுத்த ஜேசிபி எந்திரங்கள் கொண்டு சாலையோரம் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News May 27, 2024

நுங்கு விற்பனை ஜோர்

image

திருவண்ணாமலை பகுதியில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் உஷ்ணத்தை தணிக்க பொதுமக்கள் பனை நுங்கு விரும்பி வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் நுங்கு எங்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதை கண்டறிந்து தேடிப்பிடித்து பொதுமக்கள் வாங்கிச் செல்வதை காணமுடிகிறது. வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்டவற்றை அதிகம் தேடி செல்கின்றனர்.

News May 27, 2024

மருத்துவம் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

image

திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அங்கீகாரம் செய்யப்பட்ட சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் 2024 -2025 ஆம் கல்வியாண்டில் சேர்வதற்கான விண்ணப்பத்தை www.tnmedicalselection.net என்ற இணையதளத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.

News May 27, 2024

திருவண்ணாமலை பருவதமலை சிறப்பு!

image

பருவதமலை, கடலாடி தென்மகாதேவமங்கலம் கிராமங்களையொட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலையாகும். இந்த மலை நவிரமலை, தென்கயிலாயம், திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை என்று அழைக்கப்படுகிறது. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இந்த மலையின்மேல் அமைந்துள்ள மல்லிகார்ஜுனர் கோயில் கிபி 3ஆம் நூற்றாண்டில் குறுநிலமன்னனான நன்னன் கட்டியதாக இக்கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது.

News May 26, 2024

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கு விண்ணப்பம்

image

தி.மலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழே இயங்கும் தி.மலை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள பயிற்சியாளர் பணியிடங்களில் நிரப்ப இணையதளம்(www. skilltraining.tn.gov.in) வாயிலாக 7-6-2024 வரை விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி 8 வகுப்பு மற்றும் 10 வகுப்பு‌. 1 ஆண்டு மற்றும் 2 ஆண்டு தொழிற்பிரிவுகள். தகவலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

News May 26, 2024

வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது

image

போளூர் அடுத்த மட்டைபிறையூர் பகுதியில் போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் நிற்காமல் சென்ற 3 இளைஞர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிரதீப் (20), சந்துரு (20), ராஜாராம் (37) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடமிருந்து சுமார் பத்து சவரன் நகை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

error: Content is protected !!