India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.மலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்கள் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, தி.மலை கூட்டுறவு மேலாண்மை நிலையம், கீழ்நாச்சிப்பட்டு என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04175-254793, 9942011945 என்ற எண்களிலோ அல்லது மின்னஞ்சல் மூலமோ தொடா்பு கொள்ளலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசகூடும் என்பதால் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் பிரசித்தி பெற்ற சித்திரை பௌர்ணமி கிரிவலம் நேற்று முதல் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்கள் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்றனர் அவர்களுக்கு மருத்துவ முதலுதவி செய்யும் வகையில் ரெட் கிராஸ் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் இந்திர ராஜன் மண்ணுலிங்கம் கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடுகள் செய்தனர்
அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு அடுத்தபடியாக, அதிகளவு பக்தர்கள் சித்திரை மாத பௌர்ணமியன்று கிரிவலம் வருவது வழக்கம்.அதன்படி, திங்கள்கிழமை இரவு முதலே பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினர்.இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் இன்று அதிகாலை வரை பல லட்சம் பக்தர்கள் கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இரண்டரை மணி நேரமாக வாகனங்கள் இயங்காமல் ஸ்தம்பித்தது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இடங்களில், முறையாக அன்னதானம் வழங்கப்படுகிறதா என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் நேற்று (23.04.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில், அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அண்ணாமலையாரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க அருணாசலேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முகாமின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (23.04.2024) நேரில் சென்று ஆய்வு செய்து சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு தண்ணீர், நீர்மோர், பிஸ்கட், வாழைப்பழம், புளியோதரை, தர்பூசணி பழம், பிரசாத லட்டு மற்றும் பிரசாதம் வழங்கினார்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. வடக்கு மண்டல காவல்துறை தலைவர் க.ச.நரேந்திரன் நாயர், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி.கார்த்திகேயன் ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக மெமு சிறப்பு ரயில், ஏப்.23ம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நள்ளிரவு 12.05 மணிக்கு தி.மலையை சென்றடையும். தி.மலை-சென்னை கடற்கரை மெமு சிறப்பு ரயில் தி.மலையில் இருந்து ஏப்.24ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, அதேநாளில் காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் சித்ரா பௌர்ணமி – 2024 முன்னிட்டு, கோயிலில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் இன்று (23.04.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.