Tiruvannamalai

News March 30, 2025

நீட் தேர்வு பயத்தினால் மாணவி தற்கொலை

image

திருவண்ணாமலை ,வந்தவாசி அருகே ராயனந்தல் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் – தேவி தம்பதியர், தற்போது குடும்பத்துடன் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் தேவதர்ஷினி நேற்று நீட் தேர்வு பயத்தினால் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவிக்கு பெற்றோருக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடாக கொடுக்க பாமாக அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

News March 30, 2025

யூடியூப் சேனல் தொடங்க தமிழக அரசு பயிற்சி

image

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் ‘சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்’ என்ற 3 நாள் பயிற்சியை நடத்த உள்ளது. வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18+ வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்

News March 30, 2025

தொழிற்சாலையில் திடீர் பயங்கர தீ விபத்து

image

காஞ்சிபுரம் சாலையில் உள்ள அழிஞ்சில் பட்டு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் திடீர் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வெடி சத்தத்துடன் மேலும் தீ பரவிய நிலையில் தகவல் அறிந்த செய்யாறு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

News March 30, 2025

மன வருத்தத்தில் தற்கொலை 

image

வந்தவாசி அருகே கடம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை (58) இவரது மகள் சத்தியவாணிக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் வருத்தத்தில் நேற்று முன்தினம் தூக்கு போட்டுகொண்டார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

News March 29, 2025

இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்.

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (29.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்.அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவலர்களின் கைப்பேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புறத்தில் பாதுகாப்பின்மை ஏற்படுத்தும் நபர்கள் கண்டால் 100 டயல் செய்யவும்.

News March 29, 2025

சனி தோஷம் நீக்கும் எந்திர சனீஸ்வரர்

image

தி.மலை மாவட்டம் ஏரிக்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற எந்திர சனீஸ்வரர் கோவில் உள்ளது. இன்று சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளதால் விஷேஷ பூஜை நடைபெற உள்ளது. இங்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால், சனிப்பெயர்ச்சியால் உண்டாக்கும் தோஷம் நீங்கி, நீண்ட ஆயுளுடன் நோய் நொடி இல்லாமல் வாழலாம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.

News March 29, 2025

மாணவிக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

image

செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரவிநாயகம் 5 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதுடன், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

News March 29, 2025

பள்ளி படிப்பும், கணினி திறனும் இருந்தால் வேலை

image

மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய 209 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News March 29, 2025

வாட்டிவதைக்கும் வெயில்: அச்சத்தில் மக்கள்

image

கோடைகாலம் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயில் 101 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் பதிவாகியுள்ளது. மார்ச் மாதமே முடியாத நிலையில் 101 டிகிரி செல்சியஸ் பதிவானதால் வருகின்ற நாட்கள் இன்னும் அதிகமாக வெப்பம் பதிவாக கூடும் என மக்கள் அச்சமடைந்துள்ளார்.

News March 29, 2025

5ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

image

செங்கம், செ.நாச்சிப்பட்டு அரசு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தரவிநாயகம். இவர் மதுபோதையில் பள்ளிக்கு வந்து 5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கார்த்திகேயன், சுந்தரவிநாயகத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!