Tiruvannamalai

News July 10, 2025

பேருந்தில் சில்லறை வாங்கவில்லையா? DON’T WORRY

image

பேருந்து பயணத்தில் ‘அப்றம் சில்லறையை வாங்கிக்கோங்கனு’ கன்டக்டர் சொன்ன நொடியில் இருந்து, மீதி சில்லறை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். இனி அந்த கவலை வேண்டாம். ஒரு வேளை உங்களது மீது சில்லறையை வாங்காமல் இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், உங்க காசை GPAY செய்து விடுவார்கள். மேலும் தகவலுக்கு(9445021403). *செம திட்டம் ஷேர் பண்ணுங்க*

News July 10, 2025

தி.மலை: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

image

ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதியாக 1 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளது. இதில் வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படும். வயதானோர்/ ஆதரவற்றோருக்கு அரசே கட்டுமான பணிகளை செய்து தருகிறது. இதற்கான KVVT survey குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்வர். தனியாக விண்ணப்பிக்க விரும்பினால் ஊராட்சி மன்றம்/ ஆட்சியர் அலுவலகத்தை(04175233333) அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17015892>>தொடர்ச்சி<<>>

News July 10, 2025

கலைஞர் கனவு இல்லத் திட்ட விவரங்கள்

image

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் சேர சொந்தமாக 350 ச.அடி நிலமும், பட்டாவும் இருக்க வேண்டும். சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க கூடாது. குடிசை வீடு எனில் ஒரு பகுதி ஓடு/ கான்கீரிட்டாக இருக்க கூடாது. கிராமப்புறத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அந்த நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வந்தால், விண்ணப்பிக்க இயலாது. *சொந்த வீடு கனவை நனவாக்கும் சூப்பர் திட்டம் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க. அப்டியே ஷேர் பண்ணுங்க*

News July 10, 2025

திருவண்ணாமலையில் 2,173 பேர் கைது

image

மத்திய அரசின் தோழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் 12 இடங்களில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 413 பெண்கள் உள்பட 2,173 பேர் கைது செய்யப்பட்டனர்.

News July 10, 2025

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சிறப்பு பேருந்துகள்

image

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூலை 11, 12, 13-ம் தேதிகளில் அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தி.லை, திருச்சி, மதுரை, நெல்லை, குமரி, கோவை, சேலம், திருப்பூர் மற்றும் கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, ஓசூர், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.

News July 10, 2025

தி.மலை வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை

image

தி.மலையை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவிதொகை வழங்கப்படுகிறது. இதில், 10th பெயிலானவர்களுக்கு மாதம் ரூ.200, 10th பாஸ்-ரூ.300, 12th பாஸ்-ரூ.400, பட்டதாரி-ரூ.600 வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600-ரூ.1000 வரை வழங்கப்படும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்(04175-233381) விண்ணப்பத்தை பெற்று ஆக.29-க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். <<17014250>>தொடர்ச்சி.<<>> நண்பர்களுக்கு பகிரவும்.

News July 10, 2025

உதவி தொகை பெற தேவையான தகுதிகள்

image

இதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த 30 ஆம் தேதியுடன் 5 வருடத்தை நிறைவு செய்தவர்களாக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். SC/ST-யினர் 45 வயதுக்கு மிகாமலும், BC/MBC மற்றும் இதர வகுப்பினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும், குடும்ப வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். சூப்பர் திட்டம். அனைவருக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்

News July 10, 2025

தி. மலை: மாற்றுத்திறனாளிகள் விவரம் சேகரிப்பு

image

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் வீடுகளுக்கு நேரடியாக வழங்க, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூலை 10 முதல் செப்டம்பர் இறுதிவரை மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து விவரங்கள் சேகரிக்கும் பணியை முன்களப் பணியாளர்கள் மேற்கொள்ள உள்ளனர். வீடு தோறும் நேரில் சென்று முழுமையான தரவுகள் பதிவு செய்யப்படும். பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் ப. தர்ப்பகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News July 10, 2025

மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முகாம்

image

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு மனு விசாரணை முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் கோரிக்கை மனு அளித்த பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டார். இந்த முகாமில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களுடைய கோரிக்கை மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்தனர்.

News July 10, 2025

ரோந்து பணி காவலர்களின் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

error: Content is protected !!