Tiruvannamalai

News July 11, 2024

தேசிய ஒற்றுமை விருதுக்கு அழைப்பு

image

திருவண்ணாமலை மாவட்டதில் 2024 ஆண்டிற்கான சர்தார் பட்டேல் தேசிய ஒற்றுமை விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பங்களித்தவர்கள் உரிய சுயவிவர குறிப்பு மற்றும் ஆவணங்களுடன் விண்ணப்பத்தை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் அளிக்கலாம். மேலும் <>https://awards.tn.gov.in<<>> என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News July 11, 2024

ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்டம்

image

தி.மலை மாவட்ட ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் இன்று முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், கீழ்செட்டிப்பட்டு கிராமத்தில் இன்று அமைச்சர் எ.வ.வேலு முகாமை தொடங்கி வைக்கிறார். 15 துறைகளை ஒருங்கிணைத்து 124 இடங்களில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

News July 10, 2024

100 நாள் வேலை திட்ட பணிகளை கண்காணிக்க உத்தரவு

image

திருவண்ணாமலை மாவட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு ரூ.319 கூலி நிர்ணயம் செய்யப்பட்டு 6,10,261 தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். மாவட்டத்தில் 975 குளங்கள், 660 விளையாட்டு மைதானங்கள், 325 வரப்பு கட்டும் பணிகள் நடைபெறுவதால் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நடைபெற்று வரும் பணிகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News July 10, 2024

தி.மலை: கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை சார்பில், மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு
உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆதிதிராவிடர்களுக்கு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில்
உள்ள கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள்.

News July 10, 2024

மாநில அளவில் பூப்பந்தாட்ட போட்டிகள்

image

ஆரணி, டவுன் கிளப் சார்பில் மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டிகள் வரும் 13, 14ஆம் தேதிகளில் ஆரணி கோட்டை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆரணி எம்பி தரணிவேந்தன், தமிழக தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமையேற்று போட்டியை துவக்கி வைக்கின்றனர். முதல் பரிசு ரூ.15,000, 2ம் பரிசு ரூ.12500, 3ம் பரிசு ரூ.10000, 4ம் பரிசு ரூ.7500, 5ம் பரிசு 5000 வழங்கப்பட உள்ளது.

News July 10, 2024

தி.மலை: மடாலயத்திற்கு கவர்னர் வருகை

image

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே திருமலை பகுதியில் அமைந்துள்ள ஜெயினர் மடாலயத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து பிராகரிதம் மொழி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு டெல்லி மத்திய யுனிவர்சிட்டி சான்று வழங்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைபுரிந்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் கவர்னருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

News July 10, 2024

பருவமழை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிவாரண முகாம், பேரிடரால் உயிரிழப்பு, கால்நடை இறப்பு, வீடு சேதம், தண்ணீர் செல்லும் பாதைகளில் ஆக்கிரமிப்பு, ஏரிக்கரை உடைப்பு போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க இன்றுமுதல் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

News July 10, 2024

பயிர் காப்பீடு செய்ய தேதி அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு 2024-25ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள்ளது . ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு பிரீமியம் தொகை ரூ.590-ஐ ஜூலை 15-க்குள் செலுத்த வேண்டும். மணிலா ரூ.590, சாமை ரூ.190, மக்காச்சோளம் ரூ.436, கம்பு ரூ.272 ஆகியவற்றுக்கான பிரீமியம் தொகை செலுத்த ஜூலை 31ஆம் தேதி கடைசி நாள் என்று ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News July 10, 2024

வண்டல் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் வண்டல் மண் எடுக்க விருப்பமுள்ள விவசாயிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.கர பாண்டியன் தெரிவித்துள்ளார். https:/www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள தங்கள் வட்டத்திற்குட்பட்ட ஏரி, குளங்களிலிருந்து இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

News July 10, 2024

தி.மலை ஆட்சியர் அறிவிப்பு

image

தி.மலை மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கு கிராமபுற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் வருமானத்தை பெருக்கவும், 50 சதவீதம் மானியத்தில் புறக்கடை நாட்டின கோழி வளர்ப்பு திட்டம் செயல்படுத்த 1 பயனாளிக்கு 40 கோழிக்குஞ்சுகள் வீதம் 4 வார கோழி குஞ்சுகள் வழங்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு மக்களுடன் முதல்வர் முகாம்களில் மனு அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!