Tiruvannamalai

News June 30, 2024

சிறப்பு கிராமசபை கூட்டம் ஒத்திவைப்பு

image

தி.மலை மாவட்டத்தில் 860 பஞ்சாயத்துகளில் கலைஞர் கனவு இல்லம் மற்றும் பசுமை வீடுகள் பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு கிராமசபை கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக கூட்டம் ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். பயனாளிகள் புதுவீடு பெறுவதற்கு தேவையான ஆவணங்களை கிராம சபை கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 30, 2024

அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2017-18ம் ஆண்டு பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ததில் மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடந்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி வேல்முருகன் இப்புகாரின் மீது விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று(ஜூன் 29) தெள்ளார்,ஆரணி,ஜவ்வாதுமலை ஆகிய ஒன்றியங்களில் பணியாற்றிய 3 பிடிஓக்கள் உள்பட 24 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

News June 30, 2024

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கால அவகாசம் நீட்டிப்பு

image

திருவண்ணாமலை, செங்கம் அருகே நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் கட்ட கலந்தாய்வு ஜூன் 18 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. மேலும் சில பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு அரசு உத்தரவின்படி நேரடி சேர்க்கை நடைபெற இருப்பதால் மாணவர்கள் நேரடியாக சான்றிதழ்களுடன் கல்லூரியில் முதல்வரை தொடர்பு கொள்ளுமாறு கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 30, 2024

புதிய மாநகரமாகும் திருவண்ணாமலை மாவட்டம்

image

திருவண்ணாமலை 1989ல் இருந்து தனி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. தமிழக சட்டசபையில் ஜூன் 28, 4 புதிய மாநகராட்சிகள் உருவாவதற்கான மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. இதில் திருவண்ணாமலை புதிய மாநகராட்சியாக உருவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான வருவாய், மக்கள் தொகை வரம்புகள் திருத்த மசோதா சட்டபேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகளை ஒன்றிணைத்து மாநகராட்சி உதயமாகிறது.

News June 29, 2024

புதிய மாநகரமாகும் திருவண்ணாமலை மாவட்டம்

image

திருவண்ணாமலை 30-9-1989 இருந்து தனி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. தமிழக சட்டசபையில் நேற்று 4 புதிய மாநகராட்சிகள் உருவாவதற்கான மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. இதில் திருவண்ணாமலை புதிய மாநகராட்சியாக உருவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான வருவாய், மக்கள் தொகை வரம்புகள் திருத்த மசோதா சட்டபேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகளை ஒன்றிணைத்து மாநகராட்சி உதயமாகிறது.

News June 29, 2024

துணை தேர்விற்கான தேர்வு மையம் தயார் செய்யும் பணி

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் அரசு பள்ளிக்கல்வித் துறை நடத்திய பொது தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு துணை தேர்வு வருகிற ஜூலை 2ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்விற்கான தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது என்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அதிகாரி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News June 28, 2024

சமரச முறையில் தீர்வு காண சிறப்பு நீதிமன்றம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரசம் முறையில் தீர்வு காண ஜூன் 29 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதற்கு சட்ட பணிகள் ஆணைக் குழுவை disatriuvannamalai@gmail.com மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழு தலைவர் பி. மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

News June 28, 2024

சீருடைகள் தைக்கும் பணி: ஆட்சியர் அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் தையல் தொழிற்கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம், 2 ஆயிரத்து 174 பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் 73 ஆயிரத்து 514 மாணவர்கள், 73 ஆயிரத்து 899 மாணவிகள் என மொத்தம் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 413 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 கோடியே 37 லட்சத்து 83 ஆயிரத்து 959 மதிப்பில் தைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்

News June 27, 2024

திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

image

திருவண்ணாமலையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 76 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் நேற்று வழங்கினாா். தி.மலை மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கைகள், திருநம்பிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

News June 27, 2024

தி.மலை: ஜூன் 30ஆம் தேதி கடைசி நாள்

image

தி.மலை, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தி.மலை விவகார எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கரும்பை ஆலைக்கு பதிவு செய்யாமல் உள்ளனர். எனவே, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் விவகார எல்லை பகுதிகளில் 2024-25 ஆண்டிற்கான கரும்பு சாகுபடி செய்ய இதுவரை ஆலைக்கு பதிவு செய்யாத விவசாயிகள் வரும் 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!